விழவே செய்யாது.. சூரிய கிரகணத்தில் செங்குத்தாக நிற்கும் உலக்கை.. பின்னணி!
சென்னை : உலக்கை எந்தப் பிடிமானமும் இன்றி செங்குத்தாக நிற்பதன் அடிப்படையில் பழைய காலங்களில் சூரிய / சந்திர கிரகணங்களைக் கணக்கிட்டுள்ளனர்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று சூரிய கிரகணம் தெரியத் தொடங்கியது. தமிழகத்தில் 5.14 மணி முதல் 5.44 மணி வரை சூரிய கிரகணத்தை காண முடியும். தமிழகத்தில் 8 சதவீதம் அளவிற்கு மட்டுமே சூரியன் மறைப்பு நிகழ்ந்தது.
பழைய காலங்களில், கிரகணம் நடப்பதைக் கண்டறிய உலக்கைகளை செங்குத்தாக நிறுத்தி வைப்பார்களாம். மற்ற நேரங்களில் பிடிமானம் இன்றி செங்குத்தாக நிற்காத உலக்கை, கிரகண நேரத்தில் மட்டும் செங்குத்தாக நிற்குமாம்.
கிரகணம் முடிவடையும்போது உலக்கை கீழே விழும் எனக் கூறப்படுகிறது. இப்போதும், கிராமப்புறங்களில் உலக்கைகளை நிறுத்தி கிரகணத்தை உணர்கிறார்கள்.

சூரிய கிரகணம்
சூரிய கிரகணம் என்பது, பூமி மற்றும் சூரியனுக்கு இடையே சந்திரன் ஒரே நேர்கோட்டில் வரும் நிகழ்வு. இன்று தோன்றியுள்ள கிரகணம் பகுதி சூரிய கிரகணம் (partial solar eclipse) என அழைக்கப்படுகிறது. அதாவது, பூமியில் இருந்து தெரியும் சூரியனின் ஒரு பகுதியை மட்டும் சந்திரன் மறைக்கும் நிகழ்வையே பகுதி சூரிய கிரகணம் என்கிறோம். சூரியன் - பூமி - சந்திரன் ஆகியவை ஒன்றுக்கொன்று 5.1 டிகிரி கோணத்தில் சாய்ந்து தற்போது சூரிய கிரகணம் நிகழ்ந்து வருகிறது.

அறிவியல்
சூரிய கிரகணத்தை நாம் வெறும் கண்களால் பார்க்க கூடாது என அறிவியலாளர்கள் எச்சரிக்கின்றனர். இதுவே சந்திர கிரகணத்தை நாம் கண்களால் நேரடியாகப் பார்க்கலாம். சூரிய கிரகணத்தின்போது சூரியனை நேரடியாகப் பார்ப்பது நம் கண்களுக்குத் தீங்கு விளைவிக்கும். எனவே, கிரகணத்தைப் பார்க்க சூரிய கண்ணாடிகள் அல்லது தொலைநோக்கிகளை நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இப்போது கிரகணங்களை அறிய அறிவியல் பல நுட்பங்களைக் கண்டறிந்துவிட்டது.

சிறப்பு ஏற்பாடுகள்
இந்தியாவில் மும்பை, டெல்லி உள்ளிட்ட பல பகுதிகளில் சூரிய கிரகணம் மாலை 5 மணியளவில் பல பகுதிகளில் தெரியத் துவங்கியது. சென்னையில் மாலை 5:14 மணிக்கு சூரிய கிரகணம் தெரிந்தது. தமிழகத்தைப் பொறுத்தவரை 8 சதவீதம் மட்டுமே சூரிய மறைப்பு நிகழ்ந்தது. சூரிய கிரகணகத்தைப் பார்ப்பதற்கு பிர்லா கோளரங்கம் உள்ளிட்ட இடங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

உலக்கை டெக்னிக்
பழைய காலங்களில் கிரகணங்களை அறிய ஒரு முறையைப் பயன்படுத்தியுள்ளனர். உலக்கையின் அடிப்பகுதி தட்டையாக இல்லாததால் அதை செங்குத்தாக எந்தப் பிடிமானமும் இன்றி நிறுத்தி வைக்க முடியாது. எனினும், சூரிய கிரகணத்தின்போது உலக்கை செங்குத்தாக நிற்கும். பழைய காலத்தில் கிராமங்களில் சூரிய கிரகணம் நிகழ்வதை உலக்கைகளை நிறுத்தி கண்டறிவார்கள். கிரகணம் முடிந்தவுடன் இந்த உலக்கைகள் தானாகவே கீழே விழுந்துவிடும்.

கிராமங்களில்
தமிழ்நாட்டின் பல கிராமங்களில் சூரிய கிரகணத்தின்போது, தாம்பாள தட்டுகளில் ஆரத்தி கரைத்து, உலக்கையை செங்குத்தாக நிறுத்துவார்கள். அந்த உலக்கைகள் கிரகணம் நீடிக்கும் வரை அப்படியே நிற்கும். சூரிய கிரகணம் தொடங்குவதையும், முடிவதையும் இதைக் கொண்டே கணக்கிட்டார்கள். தற்போதும் கூட சில கிராமங்களில் சூரிய கிரகணத்தின்போது இவ்வாறு உலக்கை வைக்கும் நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. கிரகணத்தின்போது நிலவும் அதிகமான புவி ஈர்ப்பு விசை காரணமாக உலக்கை செங்குத்தாக நிற்கும் என இதற்கு காரணமும் சொல்லப்படுகிறது.
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..! -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க












Click it and Unblock the Notifications