நான் ஹிந்தி பேச மாட்டேன்.. ஹிந்தி திணிப்பை தமிழக பாஜக அனுமதிக்காது.. அண்ணாமலை அதிரடி பேட்டி
நான் இந்தி பேசமாட்டேன் என்றும் தமிழகத்தில் இந்தி திணிப்பை அனுமதிக்க மாட்டோம் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
சென்னை: இந்தியாவின் இணைப்புமொழியாக தமிழ் இருக்க வேண்டும் என்ற ஏ.ஆர்.ரகுமானின் கருத்தை நாங்கள் வரவேற்கிறோம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். நான் இந்தி பேசமாட்டேன் என்றும் தமிழகத்தில் இந்தி திணிப்பை அனுமதிக்க மாட்டோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37வது கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது. இந்தி மொழியை ஆங்கிலத்திற்கு மாற்றாக ஏற்க வேண்டும் என்று பேசியிருந்தார்.
அவரது பேச்சு, இந்தி பேசாத மாநிலங்களில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பலரும் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மு.க ஸ்டாலின்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பழுதாக்கும் வேலையை பாஜக தலைமை தொடர்ந்து செய்கிறது. இந்தி மாநிலம் போதும், இந்திய மாநிலங்கள் தேவையில்லை என்று அமித்ஷா நினைக்கிறாரா என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

அண்ணாமலை
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் இந்தி மொழியை திணிப்பதை தமிழக பாஜக ஏற்றுகொள்ளாது. 1965ல் காங்கிரஸ் கட்சி இந்தியை மூன்றாவது மொழியாக படிக்க வேண்டும் என்ற திட்டத்தை கொண்டு வந்தார்கள். 1986ல் 2வது தேசிய கல்வியில் மீண்டும் அதனை திணித்தார்கள்.

ஏ.ஆர்.ரகுமான்
இந்தியாவின் இணைப்புமொழியாக தமிழ் இருக்க வேண்டும் என்ற ஏ.ஆர்.ரகுமானின் கருத்தை நாங்கள் வரவேற்கிறோம் என்று தெரிவித்தார். நாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலத்திலும் தமிழ்மொழி பள்ளிகளை ஏற்படுத்த தமிழக அரசு முயலவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
Recommended Video

புதிய கல்விக்கொள்கை
ஒன்றாம் வகுப்பில் இருந்து 5ஆம் வகுப்புவரை கட்டாயம் தமிழில் படிக்க வேண்டும் புதிய கல்விக்கொள்கையில் மாற்றம் கொண்டுவந்தது பாஜகதான். இங்கு எத்தனை பேர் இந்தி பேசுவார்கள் என்று தெரியாது, நான் இந்தி பேசமாட்டேன் என்றும் அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications