இளையராஜா ரசிகர்களுக்கு ஸ்டாலின் குட்நியூஸ் ! 50 ஆண்டுகால திரை இசைப் பயணம் அரசு விழாவாக கொண்டாட்டம்!
சென்னை: 'இசைஞானி' இளையராஜாவின் அரை நூற்றாண்டு (50 ஆண்டுகாலம்) கால திரை இசைப் பயணத்தை அரசு விழாவாக கொண்டாடுவோம் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் ராஜாவின் இசை ராஜ்ஜியத்தில் வாழும் ரசிகர்களின் பங்கேற்போடு இந்த விழா சிறப்புறும் என்றும் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இங்கிலாந்தின் லண்டன் மாநகரில் சிம்பொனியை கடந்த 8-ந் தேதி அரங்கேற்றினார் இசைஞானி இளையராஜா. முன்னதாக இளையராஜாவை நேரில் சந்தித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருந்தார். அப்போது, ஆசியாவிலேயே யாரும் செய்யாத சாதனையாக, வரும் மார்ச் 8 அன்று இலண்டன் மாநகரில் சிம்பொனி அரங்கேற்றத்தை நிகழ்த்தவுள்ளார் நம் மனதிற்கினிய ராஜா அவர்கள். தமிழ்நாட்டின் பெருமிதமான இசைஞானியின் இச்சாதனை முயற்சியை வாழ்த்துவதற்காக இன்று நேரில் சென்றேன்.

அப்போது, தாம் கைப்பட எழுதிய Valiant symphony இசைக்குறிப்புகளை உற்சாகத்துடன் என்னிடம் காட்டி மகிழ்ந்தார். உலகத் தமிழர்களின் வாழ்வியலோடு இரண்டறக் கலந்த இசைமூச்சான #இளையராஜா அவர்களின் கணக்கற்ற சாதனைகளில் இந்தச் சாதனை ஒரு மணிமகுடமெனத் திகழ வாழ்த்துகிறேன் என தெரிவித்திருந்தார். முதல்வர் ஸ்டாலினைத் தொடர்ந்து பல்வேறு கட்சித் தலைவர்களும் இசைஞானி இளையராஜாவை நேரில் சென்று வாழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து லண்டனில் சிம்பொனியை அரங்கேற்றினார் இசைஞானி இளையராஜா. மேலும் லண்டனில் இருந்து திரும்பிய இளையராஜாவுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது.
இலண்டன் மாநகரில் #Symphony சாதனை படைத்துத் திரும்பியுள்ள இசைஞானி @ilaiyaraaja அவர்கள், அவரது பயணத்துக்கு வாழ்த்திய என்னை நேரில் சந்தித்து நன்றி கூறினார்.
— M.K.Stalin (@mkstalin) March 13, 2025
அவரது அரை நூற்றாண்டுகாலத் திரையிசைப் பயணத்தை அரசின் சார்பில் கொண்டாட முடிவெடுத்துள்ளோம்!
ராஜாவின் இசை ராஜ்ஜியத்தில் வாழும்… pic.twitter.com/e3Ofpt2Upq
இந்த பின்னணியில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் இல்லத்துக்கு சென்ற இளையராஜா, முதல்வர் ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டார். தமக்கு சிறப்பான வரவேற்பு அளித்ததற்காக தமிழ்நாடு அரசுக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கும் இளையராஜா நன்றி தெரிவித்தார்.

இந்த சந்திப்பு வீடியோவை தமது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், இலண்டன் மாநகரில் Symphony சாதனை படைத்துத் திரும்பியுள்ள இசைஞானி இளையராஜா, பயணத்துக்கு வாழ்த்திய என்னை நேரில் சந்தித்து நன்றி கூறினார். அவரது அரை நூற்றாண்டுகாலத் திரையிசைப் பயணத்தை அரசின் சார்பில் கொண்டாட முடிவெடுத்துள்ளோம்! ராஜாவின் இசை ராஜ்ஜியத்தில் வாழும் ரசிகர்களின் பங்கேற்போடு இந்த விழா சிறக்கும்! என்று அறிவித்துள்ளார். உலகெங்கும் வாழும் இசைஞானியின் பேரன்புக்குரிய ரசிகர்களுக்கு பெருமகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றிகளும் குவிந்து வருகின்றன.












Click it and Unblock the Notifications