செஸ் ஒலிம்பியாட் எங்கள் நீண்ட நாள் கனவு.. நெகிழும் போட்டி நடுவர்கள்.. அமைச்சர் மெய்யநாதன் பெருமிதம்!
சென்னை: செஸ் ஒலிம்பியாட் தொடர் மூலம் தங்களின் நீண்ட கால கனவு நிறைவேறியுள்ளதாக இந்திய செஸ் நடுவர்கள் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
44வது செஸ் ஒலிம்பியாட் தொடர் சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. ஜூலை 28ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை செஸ் ஒலிம்பியாட் தொடர் நடைபெற உள்ளது. செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ளன. இந்த தொடரில் பங்கேற்க சர்வதேச செஸ் வீரர், வீராங்கனைகள் சென்னைக்கு வர தொடங்கியுள்ளனர்.

ஒத்திகை தொடக்கம்
இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான ஒத்திகைப் போட்டிகள் இன்று தொடங்கியது. இதனை தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 44வது செஸ் ஒலிம்பியாட் தொடரின் ஒத்திகைப்போட்டி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

உலக சாதனை
இதில் 1,414 செஸ் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். 707 செஸ் பலகைகள் நேரடியாக ஆன்லைனில் இணைக்கப்பட்டு ஒத்திகைப்போட்டி நடைபெற்று வருகிறது. தற்போது நடைபெற்று வரும் ஒத்திகை போட்டி நோபல் உலக சாதனையாக தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து செஸ் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் இங்கு களத்திற்கு வந்துள்ளனர். இப்போட்டியானது காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை தொடர்ந்து நடைபெறும்.

கனவு நிறைவேறியது
செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக 4 ஆண்டுகள் செய்ய வேண்டிய பணிகளை, தமிழக அரசு 4 மாதங்களில் முடித்துள்ளது. இந்தியாவில் உள்ள செஸ் போட்டி நடுவர்கள் தங்கள் நீண்ட நாள் கனவு இன்று இந்த மண்ணில் நிறைவேறியுள்ளதாக உணர்ச்சிப்பூர்வமாக தமிழ்நாட்டை பாராட்டியுள்ளனர். இந்தியாவில் உள்ள பல்வேறு கிராமங்களுக்கும் செஸ் விளையாட்டை தமிழ்நாடு எடுத்து சென்றுள்ளது. எதிர்காலத்தில் எல்லோரும் அவரவர் வீட்டில் ஒரு செஸ் போர்டு வைத்து குடும்பத்துடன் தினமும் ஒரு மணி நேரம் விளையாட வேண்டும்.
Recommended Video

இந்தியாவுக்கு பெருமை
செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்துவது தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல இந்தியாவுக்கும் கிடைத்த ஒட்டுமொத்த பெருமையாக பார்க்கப்படுகிறது. செஸ் ஒலிம்பியாட் போட்டி நிகழ்வுகள் தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா முழுவதும் சென்று சேர்ந்துள்ளது. ஒலிம்பிக் போட்டியை போல் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான தீச்சுடர், இந்தியாவின் 75 நகரங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது. அந்த தீச்சுடர் வரும் 27ம் தேதி மாமல்லபுரம் கொண்டு வரப்படும் என்று தெரிவித்துள்ளார்.
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications