செஸ் ஒலிம்பியாட் எங்கள் நீண்ட நாள் கனவு.. நெகிழும் போட்டி நடுவர்கள்.. அமைச்சர் மெய்யநாதன் பெருமிதம்!
சென்னை: செஸ் ஒலிம்பியாட் தொடர் மூலம் தங்களின் நீண்ட கால கனவு நிறைவேறியுள்ளதாக இந்திய செஸ் நடுவர்கள் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
44வது செஸ் ஒலிம்பியாட் தொடர் சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. ஜூலை 28ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை செஸ் ஒலிம்பியாட் தொடர் நடைபெற உள்ளது. செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ளன. இந்த தொடரில் பங்கேற்க சர்வதேச செஸ் வீரர், வீராங்கனைகள் சென்னைக்கு வர தொடங்கியுள்ளனர்.

ஒத்திகை தொடக்கம்
இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான ஒத்திகைப் போட்டிகள் இன்று தொடங்கியது. இதனை தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 44வது செஸ் ஒலிம்பியாட் தொடரின் ஒத்திகைப்போட்டி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

உலக சாதனை
இதில் 1,414 செஸ் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். 707 செஸ் பலகைகள் நேரடியாக ஆன்லைனில் இணைக்கப்பட்டு ஒத்திகைப்போட்டி நடைபெற்று வருகிறது. தற்போது நடைபெற்று வரும் ஒத்திகை போட்டி நோபல் உலக சாதனையாக தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து செஸ் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் இங்கு களத்திற்கு வந்துள்ளனர். இப்போட்டியானது காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை தொடர்ந்து நடைபெறும்.

கனவு நிறைவேறியது
செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக 4 ஆண்டுகள் செய்ய வேண்டிய பணிகளை, தமிழக அரசு 4 மாதங்களில் முடித்துள்ளது. இந்தியாவில் உள்ள செஸ் போட்டி நடுவர்கள் தங்கள் நீண்ட நாள் கனவு இன்று இந்த மண்ணில் நிறைவேறியுள்ளதாக உணர்ச்சிப்பூர்வமாக தமிழ்நாட்டை பாராட்டியுள்ளனர். இந்தியாவில் உள்ள பல்வேறு கிராமங்களுக்கும் செஸ் விளையாட்டை தமிழ்நாடு எடுத்து சென்றுள்ளது. எதிர்காலத்தில் எல்லோரும் அவரவர் வீட்டில் ஒரு செஸ் போர்டு வைத்து குடும்பத்துடன் தினமும் ஒரு மணி நேரம் விளையாட வேண்டும்.
Recommended Video

இந்தியாவுக்கு பெருமை
செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்துவது தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல இந்தியாவுக்கும் கிடைத்த ஒட்டுமொத்த பெருமையாக பார்க்கப்படுகிறது. செஸ் ஒலிம்பியாட் போட்டி நிகழ்வுகள் தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா முழுவதும் சென்று சேர்ந்துள்ளது. ஒலிம்பிக் போட்டியை போல் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான தீச்சுடர், இந்தியாவின் 75 நகரங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது. அந்த தீச்சுடர் வரும் 27ம் தேதி மாமல்லபுரம் கொண்டு வரப்படும் என்று தெரிவித்துள்ளார்.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள் -
ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்












Click it and Unblock the Notifications