வாழ்க இந்தியத் திருநாடு! வளர்க மானிட நேயம்! இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தீபாவளி வாழ்த்து!
சென்னை: தீபாவளி கொண்டாடும் இந்து சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் தனது தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொகிதீன் கூறியிருக்கிறார்.
மதநல்லிணக்கத்தை வளர்த்தெடுக்கும் வகையில் அவர் இந்த வாழ்த்து பதிவை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து காதர் மொகிதீன் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி வருமாறு:
''இந்தியத் திருநாடு, ஆன்மீகத்தில் முதன்மை பெற்றுத் திகழும் புண்ணிய பூமி. இங்குள்ளோர் எல்லோரும் ஒரு தாய் மக்கள் என்ற உணர்வில் திளைத்தவர்கள்.
அந்த உணர்வை உலகம் முழு வதும் பரப்ப இந்த திருநாளில் அனைவரும் முனைவோம். வாழ்க இந்தியத் திருநாடு, வளர்க மானிட நேயம்! எல்லோருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
மகிழ்ச்சியும் ஒற்றுமையும் ஓங்கட்டும்! ஒன்றுபட்டு உழைப்போம்! தமிமுன் அன்சாரி தீபாவளி வாழ்த்து!
இவ்வாறு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தனது தீபாவளி வாழ்த்துச் செய்தியில் கூறியிருக்கிறார்.''
இதனிடையே இதேபோல் மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரியும், தமிழ்நாடு முஸ்லீம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா ஆகியோரும் தங்கள் தீபாவளி வாழ்த்துகளை பகிர்ந்துள்ளனர்.