"அதே" டீம்தான் வேண்டும்.. கடைசி வரை பொறுத்திருந்து.. ஐபிஎல் ஏலத்தில் ஸ்மார்ட் கேம் ஆடும் சிஎஸ்கே!
சென்னை: 2022 ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே அணி முக்கியமான திட்டம் ஒன்றுடன் ஏலம் எடுத்து வருவதாக தெரிகிறது.
2022 ஐபிஎல் ஏலம் மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. பல இளம் வீரர்கள் எதிர்பார்க்காத விலைக்கு ஏலம் சென்று கொண்டு இருக்கிறார்கள்.
இஷான் கிஷான் 15.25 கோடி ரூபாய்க்கு மும்பை அணிக்கு ஏலம் சென்றுள்ளார். 14 கோடி ரூபாய்க்கு சிஎஸ்கே அணியால் தீபக் சாகர் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.

இஷான் கிஷான்
இஷான் கிஷான் சிறந்த ஓப்பனிங் வீரர். அணியின் கேப்டன்சி மெட்டீரியல். அதேபோல் கீப்பர். இதனால் அவருக்கு கடும் போட்டி இருந்தது. தீபக் சாகர் சிறந்த பவர் பிளே பவுலர். அதோடு சிறப்பாக பேட்டிங்கும் செய்து வருகிறார். கடந்த 6 மாதமாக பல தொடர்களில் இவர் மிக சிறப்பாக பேட்டிங் செய்தார். இதனால் இவரை சிஎஸ்கே விட்டுக்கொடுக்காமல் எடுத்துள்ளார்.

சிஎஸ்கே
இந்த முறை ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே அணி அதே பழைய டீமை எடுப்பதற்காக முயன்றது. தோனியின் கடைசி சீசனாக இது இருக்க வாய்ப்பு உள்ளதால் அதே டீமை மீண்டும் எடுக்க முயன்றது. அதன்படியே ராபின் உத்தப்பாவை 2 கோடிக்கு எடுத்தது. தீபக் சாஹரை போராடி 14 கோடி ரூபாய்க்கு எடுத்தது. முதலில் தீபக் சாஹரை எடுக்காதது போல சிஎஸ்கே இருந்தது.

சாஹர்
மற்ற அணிகளின் விருப்பம் எவ்வளவு என்று சோதித்தது. அதன்பின் 11 கோடி வந்த பின் சாஹரை ஏலம் கேட்டது சிஎஸ்கே. ராஜஸ்தான் அணி இவரை எடுக்க போராடினாலும் 14 கோடி வரை தைரியமாக சென்று சிஎஸ்கே இவரை எடுத்தது. கடைசி வரை பொறுத்திருந்து இவரை சிஎஸ்கே எடுத்தது. அதேபோல் ராயுடுவை ஹைதராபாத் அணியோடு போட்டி போட்டு 6.75 கோடி ரூபாய்க்கு சிஎஸ்கே எடுத்தது.

பிராவோ
பிராவோவையும் 4.40 கோடிக்கு ஹைதராபாத் அணியோடு போராடி சிஎஸ்கே எடுத்தது. இதில் சிஎஸ்கே விட்டுக்கொடுத்தது டு பிளசிஸ் மட்டுமே. ஆனால் அவரும் கூட பெங்களூர் அணியில் கேப்டனாகும் வாய்ப்பு உள்ளது. பொதுவாக ஐபிஎல் அணிகள் வேறு ஒரு அணியின் வீரரை எடுத்து கேப்டனாக்க முயன்றால் அதற்காக உள்ளே கோரிக்கைகள் வைக்கும்.. அதாவது விட்டுக்கொடுக்கும்படி கோரிக்கைகள் வைக்கும்.

டு பிளசிஸ்
அப்படித்தான் சிஎஸ்கே டு பிளஸிஸை பெங்களூருக்கு விட்டுக்கொடுத்து இருக்கலாம் என்றும் பேச்சு அடிபடுகிறது. இவருக்கு பதிலாக ஒப்பனராக டி காக், வார்னர், படிக்கல் ஆகியோரை எடுக்க முயன்று சிஎஸ்கே தோற்றது குறிப்பிடத்தக்கது. மற்றபடி கோர் வீரர்களை மீண்டும் சிஎஸ்கே எடுத்துவிட்டது. ரெய்னா இன்று எடுக்கப்படவில்லை என்றாலும் நாளை மீண்டும் அடிப்படை விலையில் எடுக்கப்படலாம்.
Recommended Video

அதே டீம்
சாஹரை போலவே ஷரத்துல் தாக்கூரையும் சிஎஸ்கே எடுக்கும் என்று எதிர்பாக்கப்பட்டது.ஆனால் அவரை சிஎஸ்கே எடுக்கவில்லை. காலையில் இருந்து சிஎஸ்கே பொறுத்திருந்ததற்கு காரணம் இதுதான் என்று கூறப்படுகிறது. பொறுமையாக இருந்து கடைசியில் தேவையான அதே வீரர்களை சிஎஸ்கே எடுத்துள்ளது. இதனால் சிஎஸ்கே மீண்டும் 99% பழைய அணியோடுதான் இந்த தொடரில் விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications