13 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம், பதவி உயர்வு.. தமிழக அரசு பிறப்பித்த அதிரடி உத்தரவு!
சென்னை: தமிழ்நாட்டில் 13 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்தும், பதவி உயர்வு வழங்கியும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை ஐ.ஜி ஏ.கயல்விழி சீருடைப் பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் செயலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கும்பகோணம் ஏஎஸ்பி அங்கித் சிங், எஸ்பியாக பதவி உயர்வு தரப்பட்டு சேலம் வடக்கு துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசு காவல்துறையில் அவ்வப்போது முக்கிய மாற்றங்களைச் செய்து வருகிறது. அந்தவகையில் இன்று, தமிழ்நாடு முழுவதும் 2 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. 11 ஐபிஎஸ் அதிகாரிகள் டிரான்ஸ்பர் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து தமிழக உள்துறை செயலாளர் தீரஜ்குமார் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

பெண்களுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு ஐஜி ஏ.கயல்விழி சீருடைப் பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் செயலராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். வேலூர் எஸ்பி மயில்வாகனன் சென்னை தெற்கு சரக லஞ்சஒழிப்புத்துறை எஸ்பியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கும்பகோணம் ஏஎஸ்பி அங்கித் சிங், எஸ்பியாக பதவி உயர்வு தரப்பட்டு சேலம் வடக்கு துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பொள்ளாச்சி உதவி காவல் கண்காணிப்பாளராக இருந்த சிருஷ்டி சிங் காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்று, திருச்சி மாநகர தெற்கு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். சீருடைப் பணியாளர் தேர்வு வாரிய ஐஜி/ உறுப்பினர் செயலர் ராஜேஸ்வரி, பெண்களுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு (சென்னை) ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

திருச்சி தெற்கு துணை ஆணையர் ஈஸ்வரன் ஆவடி மாநகர போக்குவரத்து பிரிவு துணை ஆணையராகவும், சென்னை ரயில்வே காவல் கண்காணிப்பாளர் ஈஸ்வரன், அண்ணா நகர் துணை ஆணையராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கோயம்பேடு துணை ஆணையர் சுஜித் குமார், சென்னை மாநகரம் போக்குவரத்து (மேற்கு) துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை மாநகரம் போக்குவரத்து (மேற்கு) துணை ஆணையர் சுகாசினி, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரிய காவல் கண்காணிப்பாளராகவும், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரிய காவல் கண்காணிப்பாளர் நாகஜோதி சென்னை காவல் பயிற்சி கல்லூரி முதல்வராகவும், சேலம் மாநகர காவல் துணை ஆணையர் சிவராமன், வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை அண்ணா நகர் துணை ஆணையர் உதயகுமார் கோயம்பேடு துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். காத்திருப்போர் பட்டியல் இருந்த ரம்யா பாரதி, சென்னை குற்றப்பிரிவு ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
-
தவெக பூந்தமல்லி வேட்பாளருக்கு சிக்கல்.. பெண் அளித்த புகாரின் பேரில் பாலியல் வழக்கு பதிவு -
எல்லா SP-க்களும் சென்னை நோக்கி.. தலைநகரில் 8 பேருக்கு புதுபொறுப்பு! வெயிட்டிங் லிஸ்ட்க்கு குட்பை -
ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வு எழுதுவோரின் கனவு.. யுபிஎஸ்சி தேர்வு முறை குறித்து திமுக எம்பி வில்சன் கேள்வி -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல்












Click it and Unblock the Notifications