இன்னும் 35 எடுத்தால் போதும்.. காங்கிரசுக்கு போன முக்கிய "இன்டெர்னல் ரிப்போர்ட்".. அடடா அப்போ பாஜக?
சென்னை: லோக்சபா தேர்தலில் மீதம் உள்ள 2 கட்டங்களில் எப்படியாவது 35 இடங்களை எடுக்க வேண்டும் என்ற திட்டத்தில் காங்கிரஸ் காய் நகர்த்தி வருகிறதாம். 5ம் மற்றும் 6ம் கட்டங்களில் தேர்தல் முடிவுகள் பெரிய அளவில் மாறும் என்று அக்கட்சியின் உள்வட்ட சர்வேக்கள் தெரிவிக்கின்றனவாம்.
இன்னும் மீதம் உள்ள 2 கட்டங்களில் எப்படியாவது 35 இடங்களை எடுத்தால் கூட பாஜக ஆட்சியை முடிவிற்கு கொண்டு வர முடியும் என்று உள்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றனவாம். 5 கட்ட வாக்குப்பதிவு முடிந்ததும் காங்கிரஸுக்கு முக்கியமான ஒரு ரிப்போர்ட் ஒன்று சென்றுள்ளதாம். அதில் தென்னிந்தியாவில் 50+ இடங்களை வெல்வோம் என்று அந்த கட்சி நம்புகிறதாம்.

இது போக வடக்கில் மேலும் 35 இடங்களில் வடக்கிலும் மற்றும் மாநிலங்களிலும் காங்கிரஸ் வெல்லும் என்று உட்கட்சி கணிப்புகள் தெரிவிக்கின்றனவாம். மகாராஷ்டிரா + கோவா : 10+, ராஜஸ்தான் + மத்திய பிரதேசம் + சத்தீஸ்கர் : 10+, உ.பி+பீகார்+ஜார்கண்ட் : 8+, ஒடிசா + மேற்கு வங்கம் + வடகிழக்கு : 7+ என்று மொத்தம்: 85+ இடங்களை வெல்லலாம் என்று காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி சர்வே தெரிவிக்கிறதாம்.
காங்கிரஸ் வெற்றி பிளான்: இப்படிப்பட்ட நிலையில்தான் மீதம் உள்ள 2 கட்டங்களில் எப்படியாவது 35 இடங்களை எடுக்க வேண்டும் என்று அந்த கட்சி திட்டமிட்டு வருகிறதாம்.
2004 இல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 138 இடங்களில் வென்றது. அவர்களுக்கு எதிராக காங்கிரஸ் 145 வெற்றி பெற்று முதல் UPA கூட்டணி அரசாங்கத்தை அமைத்தது, ஏனெனில் பாஜகவை விட அதிகமான கூட்டணி கட்சிகள் காங்கிரஸ் உடன் சேர தயாராக இருந்தன.
இப்போது பார்முலா என்ன?: இந்த நிலையில்தான் அதே பார்முலாவை கொண்டு வர காங்கிரஸ் முயன்று வருகிறதாம். காங்கிரஸ் 140 இடங்களை எல்லாம் வாய்ப்பே இல்லை. ஆனால் இப்போது இருப்பதை விட கூடுதலாக 30-40 இடங்களை வெல்ல காங்கிரஸ் தீவிரமாக முயன்று வருகிறதாம்.
வரலாற்றில் இல்லாத அளவுக்கு 328 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் இந்த முறை போட்டியிடுகிறது. இதனால் காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக வருவது வாய்ப்பே இல்லை.
ஆனால் காங்கிரஸ் 30-40 இடங்களை கூடுதலாக முன்பை விட வென்றால் கூட களம் மாறும். 2014 மற்றும் 2019ல் காங்கிரஸ் 44 மற்றும் 52 இடங்களிலும், பாஜக 282 மற்றும் 303 இடங்களிலும் வெற்றி பெற்றன.
கடந்த தேர்தல்: மாநிலம் வாரியாக நடந்த மோதலை பார்க்கும்போது, பாஜக தனது 303 கூடுதலாக மேலும் இடங்களை சேர்க்க வேண்டுமானால் பெரும்பாலும் காங்கிரஸ் அல்லாத கட்சிகளான என்சிபி, சிவசேனா, ஆம் ஆத்மி, டிஎம்சி, பிஆர்எஸ், பிஜேடி, ஆந்திராவில் YSRCP, தமிழ்நாட்டில் திமுக ஆகியவற்றிற்கு எதிராக வெல்ல வேண்டும்.
காங்கிரஸுக்கு எதிராக, 2019-ல் போட்டியிட்ட இடங்களில் 92 சதவீத இடங்களை பாஜக வென்றது. இந்த தேர்தலில் மேலும் காங்கிரசுக்கு எதிராக கூடுதல் இடங்களை பாஜக வெல்ல வாய்ப்பே இல்லை. அதாவது காங்கிரசின் இடங்களை பாஜக பறிக்க வாய்ப்பே இல்லை. காங்கிரஸ் இதற்கும் கீழ் செல்ல வாய்ப்பே இல்லை.
எனவே, காங்கிரஸுக்கு பாஜகவிடம் இழப்பதற்கு எதுவும் இல்லை.
இதுதான் நிலவரம்; ஹிமாச்சல், உத்தரகண்ட், ஹரியானா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், உத்திரப் பிரதேசம், பீகார், சத்தீஸ்கர், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் வடக்கே தொடங்கி மேற்கு மற்றும் தெற்கே குஜராத், மகாராஷ்டிரா, கோவா மற்றும் கர்நாடகா என்று பெரும்பாலான மாநிலங்களில் எல்லா இடங்களையும் பாஜகவிடம் காங்கிரஸ் இழந்தது.
உண்மையில், இந்த மாநிலங்களில் போட்டியிட்ட மொத்தமுள்ள 241 இடங்களில் ஒன்பது இடங்களில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றது. காங்கிரஸ் இனி இழப்பதற்கு எதுவும் இல்லை. இந்த இடங்களில்தான் காங்கிரஸ் இந்த முறை பாஜகவின் 30-40 இடங்களை பறித்தால் கூட பாஜகவிற்கு அது பெரிய பிரச்சனையாக மாறும். இப்போது மீதம் உள்ள இடங்களில் 35 இடங்களை வென்றால் கண்டிப்பாக பாஜக ஆட்சி கவிழும் என்று காங்கிரஸ் நம்புகிறதாம்.
பாஜக 250 இடங்களை தனியாக பெற்றால் கூட காங்கிரஸ் 100-105 இடங்களை பெற்றால் கூட பாஜக ஆட்சி அமையாமல் போகும் சூழல் ஏற்படலாம். பாஜகவை விட காங்கிரஸ் அதிக இடங்களை வெல்ல முடியாது. ஆனால் 110 இடங்கள் வரை காங்கிரஸ் சென்றால் போதும் பாஜகவின் அஸ்திவாரத்தை ஆட்ட முடியும். அதைதான் காங்கிரஸ் இந்த முறை தீவிரமாக திட்டமிட்டு வருகிறது என்று அக்கட்சிக்கு நெருக்கமான வட்டாரத்தினர் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications