நடிகை சித்ராவின் தற்கொலைக்கு என்ன காரணம்?.. குடும்பத்தகராறில் விபரீதத்தை செய்தாரா?
சென்னை: நடிகை சித்ராவின் தற்கொலைக்கான காரணம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வந்த நடிகை சித்ரா இன்று காலை நசரத்பேட்டையில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்த போது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சித்ரா கடந்த அக்டோபர் 19-ஆம் தேதி ஹேம்நாத் என்பவருடன் பதிவு திருமணம் செய்து கொண்டார். வரும் பிப்ரவரி மாதம் வரவேற்பு நிகழ்ச்சி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

சித்ரா தற்கொலை
மிகவும் ஜாலியான தைரியமான பெண்ணான சித்ரா தற்கொலை செய்து கொண்டதை ரசிகர்களும் சக நடிகர்களும் நண்பர்களும் நம்பவில்லை. இவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அதில் சித்ராவின் தாயாருக்கும் ஹேம்நாத்திற்கு இடையே அடிக்கடி சண்டை நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது.

ஹோட்டல்
இதனால் டிசம்பர் 4-ஆம் தேதி முதல் இருவரும் நசரத்பேட்டையில் உள்ள ஹோட்டலில் தங்கி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் இருவருக்கும் நிச்சயதார்த்தம் மட்டுமே நடைபெற்றதாகவும் அவர்களுக்கு பதிவு திருமணம் எல்லாம் நடைபெறவில்லை என்றும் ஒரு தரப்பினர் கூறுகிறார்கள்.

நண்பர்கள்
நிச்சயதார்த்தத்திற்கு பிறகு விஜே சித்ரா சீரியலில் நடிப்பது பிடிக்கவில்லை என அவரிடம் ஹேம்நாத் குடும்பத்தினர் கூறினராம். அதுபோல் குமரனுடன் நெருக்கமான காட்சிகளில் நடிக்கவும் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனராம். இந்த விஷயங்களை சித்ரா தனது நண்பர்களிடம் தெரிவித்துள்ளார்.

வற்புறுத்தலா
இதனால் இந்த திருமணத்தை நிறுத்த சித்ரா முடிவு செய்திருந்ததாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஒரு வேளை ஹோட்டலில் தங்கியிருந்த சித்ராவை ஹேம்நாத் குடும்பத்தினர் சந்தித்து மேற்கண்ட கண்டிஷன்களை போட்டு அவரிடம் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியிருக்கலாம் என்றும் ஒரு தகவல் கூறுகிறது. இதனால் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு அதனால் மனமுடைந்த சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் கூறுகிறார்கள்.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications