வி.வி. மினரல்சுக்கு சொந்தமான 100க்கும் மேற்பட்ட இடங்களில் ஐடி ரெய்டு! வைகுண்ட ராஜன் வீட்டிலும் சோதனை
Recommended Video

சென்னை: பிரபல கடல் தாது மணல் ஏற்றுமதி நிறுவனமான வி.வி.மினரல்சுக்கு சொந்தமான 100க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் ஒரே நேரத்தில் அதிரடி ரெய்டுகளை நடத்தி வருகிறார்கள்.
நெல்லை மாவட்டம், திசையன்விளை என்ற ஊரை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது வைகுண்டராஜன் என்பவருக்கு சொந்தமான வி.வி.மினரல்ஸ்.

இவரது சகோதரரின் நிறுவனம் பிஎம்சி. நெல்லை மாவட்டம் குட்டம் உள்ளிட்ட இடங்களில் ஆலை அமைத்து, கடற்கரையிலுள்ள மணலை அள்ளி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்தது பிஎம்சி நிறுவனம். இதனால் கடலோர பகுதியிலுள்ள பகுதிகளில் உள்ள மக்களுக்கு புற்றுநோய் பரவுவது, நிலத்தடி நீர் உவர்ப்பாய் மாறி குடிக்க நீரில்லாமல் போனது என பல புகார்களை முன் வைத்து மக்கள் குமுறினர். இதையடுத்து ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, மணல் அள்ள தடை விதித்தார்.
இதேபோல, விவி நிறுவனமும் மணல் அள்ள தடை விதிக்கப்பட்டது. ஆனால் விவி நிறுவனம் டிவி சேனல் செய்தி ஊடக துறை உட்பட வேறு பல தொழில்களிலும் இறங்கியுள்ளது. இந்த நிலையில்தான், வி.வி. மினரல்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 100க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று அதிகாலை முதல் வருமான வரித்துறை அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
திசையன்விளை, சென்னையில், எழும்பூர், திருவான்மியூர் உட்பட பல இடங்கள், நெல்லை, தூத்துக்குடி உட்பட பல பகுதிகளில் உள்ள வி.வி. மினரல்ஸ்சுக்கு சொந்தமான அலுவலகங்கள், வைகுண்டராஜன், அவரது மகன்களின் வீடுகள், அலுவலகங்களில் அதிரடி ரெய்டு நடந்து வருகிறது.
கடந்த 3 ஆண்டுகளாக முறையாக வருமான வரி செலுத்தாதது, கணக்கில் காட்டாத அளவுக்கு வருமானத்தை குவித்தது உள்ளிட்டவை காரணமாக வருமான வரி சோதனை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications