தமிழகத்தில் தொங்கு சட்டசபை வந்தால்.. மறுபடியும் தேர்தல்தான்.. கமல்ஹாசன் பரபரப்பு தகவல்!
சென்னை: தமிழகத்தில் தொங்கு சட்டசபை ஏற்பட்டால் எங்கள் முடிவு என்னவாக இருக்கும் என்றால் இரு மோசமான நபர்களை தேர்வு செய்வதை விட மறுபடியும் தேர்தல் நடத்த வழி செய்வோம் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனியார் நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறுகையில் வரும் தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றுவிடுவோம் என நான் சொல்ல மாட்டேன். ஆனால் நாங்கள் வெற்றி பெற வேண்டும்.
அதுதான் எங்களுடைய நியாயமான எதிர்பார்ப்பு. தேர்தலில் என்ன நடந்தாலும் மக்கள் நீதி மய்யத்தை அரசியல் வரைபடத்தில் இருந்து நீக்கிவிட முடியாது. இதுதான் எங்கள் வாழ்க்கையில் முதல் 3 ஆண்டுகளில் இருக்க வேண்டிய மிக முக்கியமான இடம்.

இரு கட்சிகள்
தமிழக அரசியலில் உள்ள முக்கிய இரு கட்சிகளுமே எங்களுக்கு எதிரிகள்தான். ஒரு கட்சி இப்போது ஆட்சியில் உள்ளது. மற்றொன்று ஆட்சியில் இல்லை. அதில் ஒன்று விஷப்பாம்பு, அதற்கு இப்போது தலையில்லை, வால் இருக்கிறது. மற்றொரு கட்சியும் இந்த கட்சிக்கு சமமானதாகவே இருக்கிறது. அந்த கட்சிக்கு தலை இருக்கிறது. ஆனால் அது உயிருள்ள உதைக்கக் கூடிய விஷம் கொண்ட விலங்கு.

கட்சி நடத்த உதவுவது எது
அவர்களை நாங்கள் எதிர்கொள்ள வேண்டும். எங்கள் கட்சியில் போட்டியிடுபவர்கள் குற்றப்பின்னணி கொண்டவர்கள் அல்ல. இதற்கு முன்பு சமூக சேவைகளில் ஈடுபட்டவர்களை இதில் பயன்படுத்துகிறோம். நான் வேலை செய்து பணத்தை பெறுகிறேன். அது கட்சி நடத்த உதவுகிறது. அனைத்தையும் நான் இதற்கு செலவு செய்து இருக்கிறேன்.

சவாலான விஷயம்
அரசியலில் செயல்படுவது என்பது சவாலான விஷயம் ஆகும். சினிமாவில் சாதித்துவிட்டேன். அரசியலிலும் சாதிப்பேன். கோவையில் எனக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. தொங்கு சட்டசபை ஏற்பட்டால் எங்கள் முடிவு என்னவாக இருக்கும்? என்பதை பொருத்தவரை நாங்கள் மற்றொரு தேர்தலை மக்கள் மீது திணிக்க விரும்ப மாட்டோம்.

மறுதேர்தல்
ஆனால் இரு மோசமான கட்சிகளில் ஒன்றை தேர்வு செய்வதற்கு பதிலாக மற்றொரு தேர்தலை இழுத்து செல்வதை நாங்கள் செய்வோம். எடப்பாடி பழனிச்சாமி அல்லது ஸ்டாலின் ஆகிய இருவரில் ஒருவர் முதல்வர் என்றால் நான் அரசியலுக்கு வந்திருக்க வேண்டிய அவசியமே இல்லை என்றார் கமல்ஹாசன்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications