தமிழகம் லாக்டவுன்: 27 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அமல்- 4 மாவட்டங்களில் 50% பேருந்துகள் இயக்கம்
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்த 27 மாவட்டங்களில் அமல்படுத்தப்பட்டிருக்கும் லாக்டவுனில் கூடுதல் தளர்வுகள் இன்று முதல் அமலுக்கு வந்தன. சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 50% பேருந்துகள் இன்று காலை முதல் இயக்கப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அடிப்படையில் மாவட்டங்கள் 3 வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் தளர்வுகள் இல்லாமல் லாக்டவுன் வரும் 28-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பேருந்துகள் இயக்கம்
இதர 27 மாவட்டங்களில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்கள் ஒரு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த 4 மாவட்டங்களில் இன்று காலை முதல் குளிர்சாதன வசதி இல்லாத பேருந்துகள் 50% இயக்கப்பட்டு வருகின்றன.

சென்னையில் மெட்ரோ ரயில் இயக்கம்
இதேபோல் இந்த 4 மாவட்டங்களில் படப்பிடிப்புகள் நடத்தவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் நிறுவனங்கள் செயல்படும் நேரமும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் 100% பணியாளர்களுடன் நிறுவனங்கள் இயங்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்று முதல் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட உள்ளது.

கடை திறப்பு நேரம் நீட்டிப்பு
இதர 23 மாவட்டங்களில் கடைகள் திறப்பு நேரம் மாலை 5 மணியில் இருந்து 7 மணியாக நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வணிக வளாகங்கள், திரையரங்குகள் தவிர பெரும்பாலான கடைகளை திறக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த 23 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படவில்லை.

அலுவலகங்கள் இயங்க தளர்வுகள்
மேலும் அரசின் அத்தியாவசியத் துறைகள், சார் பதிவாளர் அலுவலகங்கள் 100% பணியாளர்களுடன் செயல்படலாம் எனவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. பொதுவாக தொழிற்சாலைகள், நிறுவனங்கள் 33% பணியாளர்களுடன் மட்டும் இயங்க அனுமதிக்கப்பட்டிருக்கிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications