ஜெயிக்கலைன்னா செத்துரு..மலையில் இருந்து குதிப்போம்.. 'நாம் தமிழர்' வேட்பாளர்களுக்கு சீமான் கட்டளை!
சென்னை: லோக்சபா தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் எப்படியாவது வெற்றி பெற்றே ஆகவேண்டும்; அப்படி தேர்தலில் வெல்லாமல் போய்விட்டால் செத்துவிடு; மலையில் இருந்து குதித்து விடு; நானும் சேர்ந்து குதிக்கிறேன் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிறப்பித்திருக்கும் 'கட்டளை' சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
லோக்சபா தேர்தலில் நாம் தமிழர் கட்சி இம்முறையும் தமிழ்நாடு, புதுவையில் தனித்தே களம் காண்கிறது. சீமான் கட்சியின் 40 வேட்பாளர்களும் அண்மையில் அறிவிக்கப்பட்டனர். ஒரே மேடையில் சீமான் 40 வேட்பாளர்களையும் அறிமுகம் செய்தது பேசுபொருளாக இருந்து வருகிறது.

சீமானின் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பலரும் வேட்பு மனுத் தாக்கல் செய்த போது, இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் பெயரில் உறுதி மொழி ஏற்றிருப்பது சர்ச்சையாகி இருக்கிறது. இதனால் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்கப்படுமா? என்பதும் கேள்விக்குறியாகி இருக்கிறது.
இதனிடையே சீமான் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில் பேசிய சில பேச்சுகள் அடுத்தடுத்து சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகி வருகிறது. 40 வேட்பாளர்களை அறிமுகப்படுத்திய சீமான் பேசுகையில், சீதாலட்சுமி ஈரோடு தொகுதியில் நிற்க வேண்டியவர். அடம்பிடித்து திருப்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார். திருப்பூர் தொகுதியில் வேறு ஒரு தங்கையைத்தான் நிறுத்த முடிவு செய்திருந்தோம். திருப்பூர் தொகுதியில் சீதாலட்சுமி போட்டியிட்டு ஜெயிக்கவில்லை எனில் செத்துரு என சொல்லி இருக்கிறேன். கொன்றே போடுவேன்னு சொல்லி இருக்கிறேன்.. ஜெகதீஷ் கிட்ட எல்லாம் ஜெயிக்கலைன்னா ஏற்காடு மலையில் இருந்து குதிச்சுடுன்னு சொல்லி இருக்கிறேன்.. நானும் வாரேன்.. சேர்ந்தே குதிப்போம்னு சொல்லி இருக்கிறேன்.. அப்படிப்பட்ட ஒரு நிலையில் நாம் நிற்கிறோம். எப்பாடுபட்டவாது நாம் வெல்ல வேண்டும். எங்களுக்கு வாக்களிக்காமல் நாதியற்றவர்களாக்கிவிடாதீர்கள்.. எங்களுக்கு வாக்களிப்பது என்பது உங்களது நன்மைக்காக; உங்களுக்காகத்தான் என்றார்.

விருப்பமே இல்லாத வேட்பாளர்களை தேர்தல் களத்தில் கட்டாயப்படுத்தி வேட்பாளராக நிறுத்தி இருப்பதாக சீமான் பேசியதும் ஏற்கனவே விவாதத்துக்குரியதானது. தற்போது சீமானின் 'செத்துவிடு' அன்பு கட்டளையும் விமர்சனத்துக்கும் விவாதத்துக்குரியதாகி இருக்கிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications