நாட்படு தேறல்- 8-வது பாடல்.... 3 தலைமுறை வாழ்வியல் மாற்றங்களுடன் கண்ணீரை வரவழைக்கும் தாலாட்டு பாடல்!
சென்னை: கவிப்பேரரசு வைரமுத்துவின் நாட்படு தேறல் தொகுப்பின் 8-வது பாடல் வெளியிடப்பட்டுள்ளது. மூன்று தலைமுறை வாழ்வியல் மாற்றங்களுடன் நெகிழ்ச்சிக் கண்ணீரை வரவழைக்கும் தாலாட்டு பாடலாக இந்த 8-ம் பாடல் அமைந்துள்ளது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
நாட்படு தேறல் - வைரமுத்துவின் நாம் நடந்த தெருவில் என தொடங்கும் 5ஆம் பாடல் வெளியீடு!
கவிப்பேரரசு வைரமுத்து நாட்படு தேறல் என்ற தலைப்பில் 100 பாடல்களை உருவாக்கி உள்ளார். 100 இசையமைப்பாளர்கள், 100 இயக்குனர்கள், 100 பாடகர்களுடன் வைரமுத்துவின் 100 பாடல்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
ஏப்ரல் 18-ந் தேதி கலைஞர் டிவி மற்றும் இசையருவி சேனல்களில் முதல் பாடல் ஒளிபரப்பானது. தற்போது 8-வது பாடல் வெளியிடப்பட்டுள்ளது. மூன்று தலைமுறை வாழ்வியல் மாற்றங்களுடன் நெகிழ வைக்கும் தாலாட்டுப் பாடலாக இது அமைந்துள்ளது.
இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் வைரமுத்து பதிவிட்டுள்ளதாவது:
நாட்படு தேறல்
எட்டாம் பாடல்
ஒரே பாட்டுக்குள்
மூன்று தாலாட்டு
1960 - 1990 - 2020
மூன்று தலைமுறைகளின்
வாழ்வியல் மாற்றங்கள்
பி.சுசீலா - சித்ரா - ஹரிணி
இது ஒரு சோதனை முயற்சி
என் திரைப்பயணத்தில்
இப்படியொரு தாலாட்டு எழுதியதில்லை.
இதில்
ஏதோ ஒரு தலைமுறையில்
நீங்களும் இருப்பீர்கள்
நாட்படு தேறலின் 8-வது பாடல்: