Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜெ. தீபா வீட்டில் புயலா? டைவர்ஸ் கேட்டு விடிய விடிய சண்டையிடுகிறாரா மாதவன்?.. நள்ளிரவில் பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெயலலிதா அண்ணன் மகள் ஜெ தீபாவின் கணவர் மாதவன் தன்னை விவாகரத்து செய்ய வேண்டும் என தீபாவை துன்புறுத்துவதாக தெரிவித்துள்ளார். இது குறித்து நேற்று நள்ளிரவு வாட்ஸ் ஆப்பில் தீபா ஸ்டேட்டஸ் வைத்து சில நிமிடங்களில் டெலிட் செய்துவிட்டதாக தெரிகிறது.

ஜெ தீபா- மாதவன் தம்பதிக்கு இடையே கடந்த சில ஆண்டுகளாக சண்டை சச்சரவுகள் நிகழ்ந்து வந்தன. சண்டை போடுவதும் சில நாட்களில் சமாதானம் ஆவதும் வாடிக்கையாக இருந்தது.

இந்த நிலையில் நேற்று இரவு 12 மணி அளவில் வாட்ஸ் ஆப்பில் ஜெ தீபா ஒரு ஸ்டேட்ஸ்ஸை வைத்திருந்ததாக பத்திரிகை, மீடியா நண்பர்களும் ஜெ தீபா வீட்டில் புயல் வீசிக் கொண்டிருப்பதாக கிசுகிசுத்து வந்தார்கள்.

ஜெ தீபா

ஜெ தீபா

இதுகுறித்து ஜெ தீபாவிடம் கேட்க அவரை ஒன் இந்தியா சார்பில் தொடர்பு கொண்டோம். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. தீபா வீட்டில் அப்படி என்னதான் பிரச்சினை என்பதை விசாரித்தோம். அதில் நமக்கு கிடைத்த தகவல்கள்: கடந்த 6 மாதங்களாக தீபாவிடம் கணவர் மாதவன் பிரச்சினை செய்து வருகிறாராம்.

 தீபா பிடிக்கவில்லை

தீபா பிடிக்கவில்லை

அவரை விட்டு பிரிந்து போகுமாறு தீபாவை கட்டாயப்படுத்துகிறாராம். திடீரென தீபாவை பிடிக்கவில்லை என மாதவன் தெரிவிக்கிறாராம். தீபாவுக்கு 6 மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாம். நரம்பு பிரச்சினை ஏற்பட்டுள்ளதாம். இதற்காக தீபா மருந்துகளை உட்கொண்டு வருகிறாராம்.

நரம்பு பிரச்சினை

நரம்பு பிரச்சினை

இந்த நரம்பு பிரச்சினையை பெரிய உடல்நல பாதிப்பாக கருதும் மாதவனோ தீபாவை பிரிய நினைக்கிறாராம். இதனால் தீபா மனரீதியாக பெரும் வேதனை அடைந்துள்ளார். எப்போது பார்த்தாலும் தீபாவை பிடிக்கவில்லை என்கிறாராம். அதனால் டைவர்ஸ் கேட்டு துன்புறுத்துகிறாராம். தனக்கென யாரும் சப்போர்ட்டுக்கு ஆள் இல்லாததால்தான் மாதவன் இப்படி செய்கிறார் என்பதால்தான் இதை எல்லோரும் பார்க்கட்டும் என்பதால் ஸ்டேட்டஸ் வைத்தாராம்.

இரு நாட்கள்

இரு நாட்கள்

தீபா சாப்பிட்டு இரு நாட்கள் ஆகிறதாம். தீபாவுக்கு கணவர் மாதவனும், தம்பி தீபக்கும் ஆதரவாக இல்லை என்பதால் அவருக்கு மன உளைச்சல் அதிகமாகியுள்ளதாம். இரவு நேரத்தில்தான் மாதவன் சண்டையிட்டு பிரச்சினையை ஏற்படுத்துகிறாராம். சரியாக 12 மணிக்குத்தான் சண்டையையே தொடங்குகிறாராம். இது விடிய விடிய நடக்கிறதாம் என விவரம் அறிந்தவர்கள தெரிவிக்கிறார்கள். ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்திற்கு செல்லவிடாமல் தீபாவை தீபக் தடுத்து வைத்துள்ளதாகவும் ஒரு தகவல் பரவுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+