மஹா சிவராத்திரி விழா.. சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு! பக்தர்கள் தரிசனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று தமிழகம் முழுக்க உள்ள சிவாலயங்களில் மகா சிவராத்திரி மிகப் பெரிய வழிப்பாடாகக் கொண்டாடப்படுகிறது.

கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் உலக பிரசித்திபெற்றது உள்ளிட்ட அனைத்து சிவாலயங்களிலும் மஹாசிவராத்திரி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. மஹாசிவராத்திரியை முன்னிட்டு சிவனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகமும், அலங்காரங்களும் செய்யப்பட்டு பக்தர்களுக்குக் காட்சியளித்தார்.

இந்நிலையில் காஞ்சிபுரம் மூங்கில் மண்டபம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு உலக புகழ்பெற்ற இமயமலையிலுள்ள அமர்நாத் பனி லிங்கத்தைப் போலவே தத்ரூபமாக அச்சு அசலாக அதனைப் பிரதிபலிக்கும் விதமாகப் பனி லிங்கமானது அமைக்கப்பட்டு பக்தர்களின் தரிசனத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Maha shivaratri festival celebration in shiva temples across tamilnadu

இமயமலை அமர்நாத் பனி லிங்கத்தை இதுவரையிலும் நேரில் சந்திக்காதவர்கள் எனக் காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் வசிக்கும் பொது மக்கள் பல்லாயிரக்கணக்கானோர் சில மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து தத்ரூபமாக அமைக்கப்பட்டிருந்த பனி லிங்கத்தைத் தரிசித்து வழிப்பட்டனர்

அதிலும் குறிப்பாக அமர்நாத் பனி லிங்கத்தை தரிசிக்கக் காடு மற்றும் மலை வழியாகப் பக்தர்கள் செல்வது போலவே தத்ரூபமாக அதற்கான பாதை அமைக்கப்பட்டு பொது மக்கள் பனி லிங்கத்தைத் தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மேலும் மஹா சிவராத்திரியை முன்னிட்டு புதிய புயல் நடன குழுவினர் சார்பில் அரங்கேறிய பல்வேறு நடனக் கலை நிகழ்ச்சிகளையும் பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் கண்டு ரசித்தனர்.

இதேபோல தஞ்சாவூர், சிதம்பரம் என மாநிலம் முழுக்க உள்ள பல சிவாலயங்களில் மகா சிவராத்திரி கொண்டாடப்பட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+