இரவு முழுக்க தொல்லை செய்கிறார்கள்.. எங்கள் கதி என்ன ஆகும்.. மெரினாவில் குமுறும் மீனவர்கள்!
மெரினாவில் போராடும் நொச்சிக்குப்பம் மீனவ மக்கள், தமிழக அரசின் மெரினா கடற்கரையை அழகு படுத்தும் திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
Recommended Video

சென்னை: மெரினாவில் போராடும் நொச்சிக்குப்பம் மீனவ மக்கள், தமிழக அரசின் மெரினா கடற்கரையை அழகு படுத்தும் திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த திட்டத்தால் தங்கள் வாழ்க்கையே நாசமாகிவிடும் என்று கூறியுள்ளனர்.
சென்னை நொச்சிக்குப்பம் மீனவ மக்கள் மெரினாவில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார்கள். மீனவர்களின் பொது பயன்பாட்டு இடங்களில் அரசு சாலை போட முடிவு எடுத்துள்ளது. இதனால் மீனவர்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர்.
அரசின் இந்த திட்டம் காரணமாக அங்குள்ள மீனவ மக்களின் கடைகள் அகற்றப்பட உள்ளது. இதை எதிர்த்து மெரினாவில் மீனவர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார்கள். அங்கு போராடும் மீனவ பெண்கள் இதுகுறித்து பேட்டி அளித்துள்ளனர்.

சொந்தம்
மீனவர்கள் அளித்துள்ள பேட்டியில், கடற்கரை அருகே இருக்கும் இடங்கள் எங்களுக்குத்தான் சொந்தம். மீனவர்கள் நாங்கள்தான் இதற்கு உரிமையாளர்கள். வண்டி, வாகனம் செல்ல நிறைய இடம் உள்ளது. எல்லா இடத்திலும் கார், பைக் செல்ல வேண்டும் என்றால் நாங்கள் எங்கே செல்வது. எங்கள் கதி என்ன ஆகும்.

தொல்லை
கடைகளை எடுக்க சொல்லி இரவு முழுக்க தொல்லை செய்கிறார்கள். காரணம் கூட சொல்லவில்லை. காரணம் இருந்தால்தானே சொல்வார்கள். மீனவர்கள் என்பதால் காரணம் கூட சொல்லவில்லை. இரவு முழுக்க கதவை தட்டி தட்டி தொல்லை செய்கிறார்கள்.

யாரும் இல்லை
எங்கள் மண்ணை விட்டு செல்ல சொல்கிறார்கள். இதைவிட்டால் நாங்கள் எங்கே செல்வது. எங்களுக்கு ஆதரவு தெரிவிக்க ஒரு கட்சி கூட கிடையாது. இந்த கடையை எடுத்தால் அடுத்து போட், கட்டுமரத்தை கூட எடுத்துவிடுவார்கள். காவல்துறை எங்களை மிகவும் தொந்தரவு செய்கிறார்கள்.

என்ன கதை இது
இந்த இடம்தான் எங்கள் வாழ்க்கை. நாங்கள் இங்கே 20 வருடமாக இருக்கிறோம். இப்போது திடீர் என்று இதை அரசு இடம் என்று கூறி காலி செய்ய சொல்கிறார்கள். இப்போது நாங்கள் எங்கே செல்வோம் என்று மீனவ பெண்கள் குமுறுகிறார்கள். இந்த போராட்டம் காரணமாக அங்கே மிகவும் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications