இரவு முழுக்க தொல்லை செய்கிறார்கள்.. எங்கள் கதி என்ன ஆகும்.. மெரினாவில் குமுறும் மீனவர்கள்!
மெரினாவில் போராடும் நொச்சிக்குப்பம் மீனவ மக்கள், தமிழக அரசின் மெரினா கடற்கரையை அழகு படுத்தும் திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
Recommended Video

சென்னை: மெரினாவில் போராடும் நொச்சிக்குப்பம் மீனவ மக்கள், தமிழக அரசின் மெரினா கடற்கரையை அழகு படுத்தும் திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த திட்டத்தால் தங்கள் வாழ்க்கையே நாசமாகிவிடும் என்று கூறியுள்ளனர்.
சென்னை நொச்சிக்குப்பம் மீனவ மக்கள் மெரினாவில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார்கள். மீனவர்களின் பொது பயன்பாட்டு இடங்களில் அரசு சாலை போட முடிவு எடுத்துள்ளது. இதனால் மீனவர்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர்.
அரசின் இந்த திட்டம் காரணமாக அங்குள்ள மீனவ மக்களின் கடைகள் அகற்றப்பட உள்ளது. இதை எதிர்த்து மெரினாவில் மீனவர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார்கள். அங்கு போராடும் மீனவ பெண்கள் இதுகுறித்து பேட்டி அளித்துள்ளனர்.

சொந்தம்
மீனவர்கள் அளித்துள்ள பேட்டியில், கடற்கரை அருகே இருக்கும் இடங்கள் எங்களுக்குத்தான் சொந்தம். மீனவர்கள் நாங்கள்தான் இதற்கு உரிமையாளர்கள். வண்டி, வாகனம் செல்ல நிறைய இடம் உள்ளது. எல்லா இடத்திலும் கார், பைக் செல்ல வேண்டும் என்றால் நாங்கள் எங்கே செல்வது. எங்கள் கதி என்ன ஆகும்.

தொல்லை
கடைகளை எடுக்க சொல்லி இரவு முழுக்க தொல்லை செய்கிறார்கள். காரணம் கூட சொல்லவில்லை. காரணம் இருந்தால்தானே சொல்வார்கள். மீனவர்கள் என்பதால் காரணம் கூட சொல்லவில்லை. இரவு முழுக்க கதவை தட்டி தட்டி தொல்லை செய்கிறார்கள்.

யாரும் இல்லை
எங்கள் மண்ணை விட்டு செல்ல சொல்கிறார்கள். இதைவிட்டால் நாங்கள் எங்கே செல்வது. எங்களுக்கு ஆதரவு தெரிவிக்க ஒரு கட்சி கூட கிடையாது. இந்த கடையை எடுத்தால் அடுத்து போட், கட்டுமரத்தை கூட எடுத்துவிடுவார்கள். காவல்துறை எங்களை மிகவும் தொந்தரவு செய்கிறார்கள்.

என்ன கதை இது
இந்த இடம்தான் எங்கள் வாழ்க்கை. நாங்கள் இங்கே 20 வருடமாக இருக்கிறோம். இப்போது திடீர் என்று இதை அரசு இடம் என்று கூறி காலி செய்ய சொல்கிறார்கள். இப்போது நாங்கள் எங்கே செல்வோம் என்று மீனவ பெண்கள் குமுறுகிறார்கள். இந்த போராட்டம் காரணமாக அங்கே மிகவும் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications