ஒரு கட்சி மட்டும் மதத்தை சொந்தம் கொண்டாடக் கூடாது.. பாஜகவை மறைமுகமாக தாக்கிய அமைச்சர் பிடிஆர்!
சென்னை: கார் மீது பாஜகவினர் செருப்பு வீசி தாக்குதல் நடத்திய பின்னர், முதல்முறையாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர் லட்சுமணனின் உடல் மதுரை விமான நிலையம் கொண்டு வரப்பட்டது. அப்போது மதுரை விமான நிலையத்தில் தமிழக அரசு சார்பாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மரியாதை செலுத்தினார். இதன்பின்னர் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் கார் மீது பாஜகவினரால் செருப்பு வீசப்பட்டது. தொடர்ந்து பாஜகவில் இருந்து நேற்று நீக்கப்பட்ட மதுரை சரவணன் அமைச்சரிடம் மன்னிப்பு கோரினார்.

பிடிஆர் ட்வீட்
இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அனைத்து கட்சியினரும் பாஜகவினருக்கு கண்டனம் தெரிவித்தனர். இதுகுறித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ராணுவ வீரரின் மரணத்தில் பாஜக விளம்பர அரசியல் செய்வதாக குற்றம்சாட்டினார். அதேபோல் பல்வேறு புகைப்படங்களையும் ஆதாரமாக வெளியிட்டார்.

ஜனநாயகம்
தொடர்ந்து 75வது சுதந்திரத் தினத்தன்று சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியேற்றிய நிகழ்ச்சிக்கு பின், அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறுகையில், பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய நாடுகளை ஒப்பிடும் போது இந்தியாவின் ஜனநாயகம் சக்தி வாய்ந்தது.

ராணுவம், அரசியல்
அதற்கு முக்கியக் காரணம் தேசப்பற்றையும், அரசியலையும் பிரித்து வைத்திருப்பதும், ராணுவத்தையும் அரசியலையும் பிரித்து வைப்பதிருப்பதும் தான். 75 ஆண்டுகள் இந்தியா ஜனநாயக சக்தியாக விளங்கியதற்கு இதுதான் மூலக்காரணம். நாகரீகம் உள்ள அரசியல்வாதிகள், தேசப்பற்றையும் ராணுவத்தையும், அரசியல் கட்சிக்குள் இழுக்கவே கூடாது.

பாஜக மீது விமர்சனம்
சீனப்போர், பாகிஸ்தான் போர், கார்கில் போர் என அண்ணா காலம் முதல் கருணாநிதி காலம் வரை திமுகவும், தமிழ்நாடும் ராணுவத்திற்கும், மத்திய அரசுக்கும் அனைத்து வகையிலும் ஆதரவளித்துள்ளோம். நாட்டுப்பற்றில் தமிழகத்தை விடவும் யாரும் மிஞ்ச முடியாது. ஏற்கனவே இந்தியாவில் உள்ள ஒரு மதத்தை அவர்கள் சொத்து போல் ஒரு கட்சி வைத்துள்ளனர்.
Recommended Video

நாட்டுக்கு நல்லதல்ல
தற்போது ராணுவத்தை, நாட்டையும் அவர்கள் சொத்து போல் இழுப்பது நாட்டிற்கு நல்லதல்ல. இதனை சுதந்திர தினத்தில் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும் என்று பாஜகவை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications