லிப்ட் தரீங்களா?.. பைக்கில் லிப்ட் கேட்டு கொரோனா தடுப்பூசி முகாமை ஆய்வு செய்த அமைச்சர் மா.சு.!
சென்னை: குறுகிய பாதையில் அமைச்சர்களின் வாகனம் வர முடியாத நிலை ஏற்பட்டதால் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை அமைச்சர்கள் மோட்டார் சைக்கிளில் சென்று ஆய்வு செய்தனர்.
தமிழகத்தில் வாரந்தோறும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இன்றைய தினம் 8ஆவது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
இந்த முகாமை அந்த மாவட்ட பொறுப்பாளர்களாக உள்ள அமைச்சர்கள் , எம்எல்ஏக்கள் பார்வையிடுகிறார்கள். முதல்வரும் இன்றைய தினம் கொளத்தூர் தொகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.

பூந்தமல்லி ஒன்றியம்
அந்த வகையில் பூந்தமல்லி ஒன்றியத்திற்குட்பட்ட காட்டுப்பாக்கம் ஊராட்சியில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் பால்வளத்துறை அமைச்சர் நாசர் ஆகியோர் கலந்து கொண்டு தடுப்பூசி முகாமை ஆய்வு செய்தனர்.

காட்டுப்பாக்கம்
மேலும் அந்தப் பகுதியில் மக்களை தேடி மருத்துவ முகாமை தொடங்கி வைத்துவிட்டு பின்னர் காட்டுப்பாக்கத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்ய இருவரும் சென்றபோது குறுகிய பாதையில் அமைச்சர்களின் கார்கள் வர தாமதமானது. இதனால் இருவரும் சிறிது தூரம் நடந்து சென்றனர்.

மோட்டார் சைக்கிள் பயணம்
பின்னர் அந்த வழியாக சென்ற மோட்டார் சைக்கிள்களை மடக்கி மோட்டார் சைக்கிளிலேயே அமைச்சர்கள் இருவரும் பயணம் செய்து முகாம்களை ஆய்வு செய்தனர். பின்னர் அமைச்சர் மா சுப்பிரமணியன் அளித்த பேட்டியில் கூறியதாவது : தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.

இரண்டாவது தவணை
75 லட்சத்திற்கு மேற்பட்டவர்களுக்கு இரண்டாவது தவணை தடுப்பூசி போட வேண்டிய நிலையில் 8-ஆவது தடுப்பூசி முகாம் இன்று தொடங்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தை பொறுத்தவரை ஒரு லட்சத்து 98 ஆயிரத்து 886 பேருக்கு இரண்டாவது தடுப்பூசி செலுத்த வேண்டி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் 950 முகாம்கள் மூலம் ஒரு லட்சம் பேருக்கு தடுப்பது செலுத்துவது என்ற இலக்கோடு தடுப்பூசி முகாமை தொடங்கி இருக்கிறார்கள்.

இரண்டாவது தவணை
திருவள்ளூர் மாவட்டத்தில் முதல் தவணை போட்டு கொண்டவர்கள் 75 சதவீதமாக உள்ளது. இரண்டாவது தவணை முப்பத்தி மூன்று சதவீதமாக உள்ளது. தமிழ்நாடு மருத்துவத் துறை வரலாற்றில் 6 ஆயிரம் இடங்களில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது பெரிய சாதனை. தொலைநோக்கு திட்டம் எது என்பதை முருகன் அறிவித்தால் நன்றாக இருக்கும். வெள்ள பாதிப்பு காண கணக்கெடுப்பு நடந்து வருகிறது என தெரிவித்தார்.
-
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்?












Click it and Unblock the Notifications