கராத்தே கொளுத்தி போட்ட ஸ்டாலினின் 2007 தாய்லாந்து பயணம்.. அப்போது வீசிய அரசியல் சூறாவளி!
Recommended Video
சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 2007-ம் ஆண்டு தாய்லாந்து சென்ற பயணம் தமிழக அரசியலில் இப்போது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியைத் தொடர்ந்து கராத்தே தியாகராஜனும் இது குறித்து பூடகமாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வெளிநாட்டு பயணம் தொடர்பாக மு.க.ஸ்டாலின் விமர்சித்திருந்தார். இதனையடுத்து ஸ்டாலினின் வெளிநாட்டு பயணங்கள் ஏன் மர்மமாக இருக்கிறது என முதல்வர் எடப்பாடியார் கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில் முதல்வர் எடப்பாடியாருக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியின் கராத்தே தியாகராஜன், அண்ணன் ஸ்டாலின் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த போது 2007-ம் ஆண்டுநவம்பர் 1-ம் தேதி தனது நண்பருடன் தாய்லாந்து தலைநகர் பாங்காங் சென்றார்; அந்தத் தகவல் முதலமைச்சராக இருந்த கலைஞருக்கு ஸ்டாலின் விமானம் ஏறும் போது தான் தெரிந்தது; அமைச்சராக இருந்து கொண்டு மத்திய அரசின் அனுமதி பெறாமல் அண்ணன் ஸ்டாலின் வெளிநாடு சென்றுவிட்டார் என கூறியிருந்தார்.
இப்படி பெரும் சர்ச்சையாகிவிட்ட அந்த 2007-ம் ஆண்டு தாய்லாந்து பயணம் குறித்து நாம் விசாரித்த போது நமக்கு கிடைத்த தகவல்கள் இவை:

அதிகாரப் போட்டி
2007-ம் ஆண்டு முதல்வர் கருணாநிதி தலைமையில் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தார் ஸ்டாலின். திமுகவில் அப்போது ஸ்டாலினுக்கு இணையாக அழகிரி, கனிமொழிக்கும் முக்கியத்துவம் இருந்தது.

அழகிரியால் நெருக்கடி
ஸ்டாலினின் ஆதரவாளரான அமைச்சராக இருந்த கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனின் இலாகாவை கருணாநிதி மாற்றி அமைத்திருந்தார். இதற்கு முழு காரணமே அழகிரியின் நெருக்கடிதான் என கூறப்பட்டது.

மத்திய அமைச்சராக கனிமொழி?
அதேபோல் மத்திய அமைச்சரவையில் கனிமொழிக்கு இடம் உறுதி செய்யப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்த தருணம். இந்த நிகழ்வுகள் அனைத்தும் ஸ்டாலின் தரப்புக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுக் கொண்டிருந்தன.

ஸ்டாலின் தாய்லாந்து பயணம்
இந்நிலையில்தான் திடீரென 2007-ம் ஆண்டு நவம்பர் 1-ந் தேதி ஸ்டாலின் தமது 2 நண்பர்களுடன் தாய்லாந்து தலைநகர் பாங்காங் சென்றார். அப்போது விமான நிலையத்தில் இருந்த ஸ்டாலினை தொடர்பு கொண்ட முதல்வராக இருந்த கருணாநிதி, முதல்வராக இருக்கும் தமது அனுமதி பெறாமல் அமைச்சர் பதவி வகிக்கும் நிலையில் வெளிநாடு செல்லக் கூடாது என ஸ்டாலினிடம் கடிந்து கொண்டதாகவும் கூறப்பட்டது. இந்த பயணம் அப்போதே பரபரப்பாக பேசப்பட்டு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
இவைதான் ஸ்டாலினின் அப்போதைய தாய்லாந்து பயணத்தின் பின்னணி என்கின்றன பத்திரிகை வட்டாரங்கள்.
இந்த பிரச்சனைகளுக்குப் பின்னரே 2009-ல் அழகிரி மத்திய அமைச்சராக்கப்பட்டதும் அவர் சென்னை வந்திறங்கும்போது ஸ்டாலின் துணை முதல்வராக பதவி ஏற்ற சம்பவங்களும் (மே 28, 2009- மே 29. 2009) நடைபெற்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
கோவை தெற்கு மட்டுமல்ல 10 தொகுதிகளிலும் இறங்கியடிக்க போகும் செந்தில் பாலாஜி.. அதிமுக பாஜக ஷாக் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
விஜய் செல்வாக்கு + பதவி.. திருமாவளவன் மாநில அரசியலுக்கு திரும்புவதற்கு பின்னணியில் 2 காரணங்கள்! -
சென்னையின் அடுத்த மேயர் நீங்கள் தானா? கேள்வி வந்ததும் திவ்யா சத்யராஜ் முகத்தில் அவ்வளவு சிரிப்பு! -
அதிமுகவை பாஜக விலைக்கு வாங்கிவிட்டது.. திருவாரூரில் தேர்தல் பரப்புரையை தொடங்கிய ஸ்டாலின்! ‘அட்டாக்' -
176 தொகுதிகளில் உதயசூரியன்! சீர்காழி தொகுதியிலும் தனிச் சின்னம் வேண்டாம்.. வைகோ எடுத்த அதிரடி முடிவு -
“என் மகன் பிரச்சாரம் செய்துதான் நான் வெற்றி பெறவேண்டும் என்ற அவசியமில்லை” - கருணாஸ் பேட்டி -
சிதறும் கிறிஸ்தவ வாக்குகள்? தமிழகத்தில் இதுவரை நடக்காத சைலண்ட் மாற்றம்! கள நிலவரம் என்ன? -
பஞ்சாயத்து.. பிரசாரம்.. அனல் பறக்கும் 'கேப்டன்' கோட்டை! பிரேமலதா முடிவால் அப்செட்டில் உடன்பிறப்புகள் -
வில்லிவாக்கத்தில் கொடி நாட்டுவாரா ஆதவ் அர்ஜுனா? சுத்துப் போட்ட திமுக! சூடு பிடிக்கும் களம்












Click it and Unblock the Notifications