திராவிட கட்சிகள் பாணியில் அதிகாரத்தை நோக்கி இந்தி எதிர்ப்பை கையிலெடுக்கும் சீமான்- கனவு நிறைவேறுமா?
சென்னை: திராவிடம், திராவிடர் இயக்கம், திராவிட கட்சிகளை மிக கடுமையாக எதிர்த்து வரும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இப்போது அதே திராவிட பாணியில் இந்தி எதிர்ப்பு ஆயுதத்தை கையில் எடுத்திருக்கிறார்.
திராவிடர் இயக்கம் சமூக நீதி, மொழிப் பிரச்சனை உள்ளிட்டவைகளில் உயிர்ப்போடும் தீரத்தோடும் மத்திய அரசுடன் யுத்தம் நடத்தியது. 1938-ம் ஆண்டு தொடங்கிய மொழிப்போருக்கான யுத்தம் இன்னமும் தொடருகிறது. குறிப்பாக 1965-ம் ஆண்டு இந்தி எதிர்ப்பு யுத்தத்தின் போது எண்ணற்றோர் தீக்குளித்து மாண்டு போயினர். பல நூறு பேர் துப்பாக்கிச் சூட்டுக்கு இரையாகினர்.
1965-ம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போராட்டம் தொடர்பான பல நூறு செய்திகள் எழுதப்படாமலேயே புதைந்து கிடக்கிறது என்கின்றனர் அந்நாளைய மொழிப் போர் தளபதிகள். அந்த இந்தி எதிர்ப்பு யுத்தத்தை தொடர அனுமதித்திருந்தால் ஆயுத கிளர்ச்சி தமிழ்நாட்டில் நடந்திருக்கும் என்பதும் மொழிப் போர் களத்தின் முன்னணியாளர்கள் கருத்து.

இந்தி எதிர்ப்பு போரும் திராவிட அதிகாரமும்
1965-ம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போரில் முதன்மை பங்காற்றியது திமுக. இதன்விளைவாக 1967-ல் திமுக எனும் திராவிட கட்சி வசமானது தமிழக அதிகாரம். அன்று தொடங்கி திமுக, அதிமுக எனும் இரு பெரும் திராவிட கட்சிகள்தான் தமிழர் நிலத்தில் அதிகார சக்திகளாக இருக்கின்றன. இந்திய நிலப்பரப்பில் வேறு எங்கும் காணாத விசித்திரமான ஒரு அரசியல் சூழ்நிலை களம். அதனால்தான் இம்மண்ணில் காங்கிரஸால் மீண்டு எழ முடியவில்லை. பாஜகவால் காலூன்றவே முடியவில்லை.

நாம் தமிழர் கட்சி
திராவிடத்தின் இந்த மாபெரும் கோட்டையைத் தகர்த்துப் பார்க்க முயற்சிக்கிறது நாம் தமிழர் கட்சி. 13 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட கட்சி என்றாலும் திராவிடத்தையே பிரதான எதிரியாகக் கொண்டு தமிழியம், தமிழ்த் தேசியம் ஆகியவற்றை முன்னிறுத்தி களத்தில் நிற்கிறது நாம் தமிழர் கட்சி. தமிழகம் தழுவிய அளவில் பரந்துபட்டு நாம் தமிழர் கட்சி ஒரு கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தினாலும் அது வாக்குகளாக அறுவடையாகவில்லை.

இந்தி எதிர்ப்பு ஆயுதம்
இந்த நிலையில் திராவிட கட்சிகள் பாணியில் இந்தி எதிர்ப்பு எனும் ஆயுதத்தை நாம் தமிழர் கட்சி கையில் எடுத்துள்ளது. இது தொடர்பாக சீமான் வெளியிட்டிருந்த அறிக்கையில், பல மொழிவழி தேசிய இனங்கள் வாழும் இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு, தனது அதிகார வலிமையைக் கொண்டு நாடெங்கிலும் இந்தியைத் திணிக்க முற்பட்டால், இந்தியாவின் மற்ற எல்லா மாநிலங்களும் அதனை ஏற்றுக் கொண்டாலும்கூட, தமிழ் மண் ஒருபோதும் தலை வணங்காது. தமிழ்நாடு மீண்டும் போர்க்கோலம் பூண்டு இந்தி திணிப்பைக் கடுமையாக எதிர்க்கும்! தமிழர் நிலத்தில் மீண்டுமொரு மொழிப்போர் வெடிக்கும்! அந்த மொழிப்போர்க்களத்தில் முதன்மை படையாக நாம் தமிழர் கட்சி இருக்கும்! அதற்கான தொடக்கமாக வருகின்ற 'நவம்பர் 1 - தமிழ்நாடு நாள்' அன்று இந்தி திணிப்புக்கு எதிரான மாபெரும் கண்டனப் பேரணியை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கவிருக்கிறது என கூறியிருந்தார்.

சென்னை பேரணி கை கொடுக்குமா?
மேலும் நாம் தமிழர் கட்சியினருக்கு எழுதிய கடிதத்தில், இப்பேரணியில் நீங்கள் ஒவ்வொருவரும் பங்கேற்பது எந்த அளவிற்கு முக்கியமோ, அந்த அளவிற்கு உங்களுடைய பாதுகாப்பும் முக்கியம் என்பதை உறவுகள் அனைவரும் உணர்ந்து செயல்படுவீர்கள் என்று நம்புகிறேன். வரலாறு காணாத வகையில் நடைபெறவுள்ள மாபெரும் இந்தி எதிர்ப்புப் பேரணியில் கலந்துகொள்ள தமிழ்நாட்டின் அனைத்து பகுதியிலிருந்தும் உணர்ச்சிப்பெருக்குடன் வருகை தரவிருக்கும் எனது பேரன்பிற்குரிய உறவுகளையும், அன்புத் தம்பி, தங்கைகளையும் நேரில் காண மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறேன் என கூறியிருந்தார். நாம் தமிழர் கட்சியின் வரலாற்றில் சென்னை இந்தி எதிர்ப்பு போராட்டம் மிக முக்கியமான பங்களிப்பை வழங்கக் கூடும் என்பது அக்கட்சியினர் எதிர்பார்ப்பு. திமுகவுக்கு இந்தி எதிர்ப்பு கை கொடுத்தது போல நாம் தமிழர் கட்சிக்கு அதிகாரத்தைக் கைப்பற்ற உதவுமா? என்பது காலத்தின் கையில்!
-
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
நம்பர் 1 முதல்வர் யார்? டாப் 5 லிஸ்ட்டில் யார் யார்? 1952 ராஜாஜி முதல் 2021 ஸ்டாலின் வரை! -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
ஸ்டாலின் வீசிய பிரம்மாஸ்திரம்.. கூட்டணி கட்சிகளுக்கு குறைவாக சீட் தந்து சமாளித்தது எப்படி? பின்னணி -
அதிமுக, பாஜக நேரடி போட்டியில்லை.. பெரம்பூரில் தவெக விஜய்க்கு சாதகம்? களமிறக்கிவிடப்பட்ட பாமக! -
0.43% பிரேமலதாவுக்கு 10+1..3% கமலுக்கு 0! இன்னொரு மதிமுக மநீம? நீங்க சினிமாவுக்கே போயிருங்க ஆண்டவரே! -
2026 தேர்தல் யார் ஜெயிப்பார்கள்? ‘நீயா நானா’வில் ஜோதிடர்கள் உடைத்த ரகசியம்! பெண்கள் ஓட்டு, மறு எலக்சன் இருக்காமே! -
கலைஞரின் மகள் கனிமொழி நெல்லையில் போட்டியா? அடம் பிடிக்கும் ஆதரவாளர்கள்! தலைமை போடும் வேறு கணக்கு! -
எஸ்டிபிஐ, கருணாஸ்க்கு தலா 1 தொகுதி ஒதுக்கீடு.. உதயசூரியன் சின்னத்திலேயே போட்டி.. எந்த தொகுதி? -
இரட்டை என்ஜின் சர்க்கார்.. ‘ஓபிஎஸ் - இபிஎஸ்’அணி சந்தித்த கடைசி தேர்தல் - 2021 ரீவைண்ட்! -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்? தனியரசு விலக முடிவு.. அதிருப்தியின் பின்னணி -
DMK Vs ADMK: தமிழக தேர்தல்களில் அதிக தொகுதிகளை வென்ற கட்சி எது தெரியுமா? சுவாரஸ்யம்!












Click it and Unblock the Notifications