நீட் தேர்வு 2021.. மாணவர்கள் விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிப்பு.. தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
சென்னை: இளங்கலை மருத்து படிப்பிற்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதியை நீட்டித்து தேசிய தேர்வு முகமை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்வி இடங்கள் நீட் தேர்வு மூலமே நிரப்பப்பட்டு வருகிறது. கொரோனா காரணமாக இந்த ஆண்டு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனப் பலரும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இருப்பினும், தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றி நீட் தேர்வு முறையாக நடத்தப்படும் எனக் கடந்த சில வாரங்களுக்கு முன் மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்தார்.

மேலும், நீட் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் ஜூலை 13 முதல் ஆகஸ்ட் 6ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது,
அதன்படி நீட் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் எனத் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. அதேபோல நீட் விண்ணப்பங்களில் திருத்தங்களை ஆகஸ்ட் 11 முதல் 14 வரை மேற்கொள்லாலம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications