சவுக்கு சங்கரை பார்க்க ஒரு மாதம் தடை.. காரணம் இதுதான்.. கடலூர் சிறை நிர்வாகம் பிறப்பித்த உத்தரவு
சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 6 மாத தண்டனையாக கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கரை பார்வையாளர்கள் பார்க்க இன்று முதல் ஒரு மாதம் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.
லஞ்ச ஒழிப்பு துறையில் பணியாற்றி வந்தவர் சங்கர். 2008ல் அரசு உயரதிகாரிகள் பேசிய டெலிபோன் உரையாடல் கசிந்தது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இதையடுத்து அவர் சவுக்கு சங்கர் என்ற பெயரில் அரசியல் விவகாரங்கள் பற்றியும், சமூக பிரச்சனைகள் பற்றியும் யூடியூப் சேனல்களில் பேட்டி அளித்து வந்தார். மேலும் இணையதளங்களிலும் எழுதி வந்தார்.

அவமதிப்பு வழக்கு
இந்நிலையில் தான் அவர் நீதிமன்றம், நீதிபதிகள் பற்றி விமர்சனம் செய்தார். இதுதொடர்பாக சவுக்கு சங்கர் மீது தாமாக முன்வந்து அவமதிப்பு வழக்கை உயர் நீதிமன்ற மதுரை கிளை பதிவு செய்தது. அதன் பின்பும் சவுக்கு சங்கர் தொடர்ந்து விமர்சனம் செய்தார். இதையடுத்து கிரிமினல் அவமதிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது.

6 மாத சிறை தண்டனை
இந்த வழக்கு நீதிபதிகள் ஜிஆர் சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சவுக்கு சங்கருக்கு 6 மாத சிறை தண்டனை வழங்கப்பட்டது. இந்த உத்தரவு செப்டம்பர் 15ல் பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து சவுக்கு சங்கர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பிறகு அவர் பாதுகாப்பு காரணங்களுக்காக கடலூர் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.

அதிக பார்வையாளர்கள் வருகை
கடலூர் மத்திய சிறயைில் செப்டம்பர் 16ம் தேதி முதல் சவுக்கு சங்கர் உள்ளார். அன்றைய தினம் முதல் அவரை ஏராளமானவர்கள் பார்த்துள்ளதாக கூறப்படுகிறது. சிறையில் செவ்வாய், வியான் கிழமைகளில் பார்வையாளர்கள் சவுக்கு சங்கரை பார்க்கலாம் என்ற நிலையில் 4 நாட்களில் மட்டும் 25 பேர் வரை பார்த்துள்ளதாக கூறப்படுகிறது.

சவுக்கு சங்கரை பார்க்க தடை
இதன் தொடர்ச்சியாக தான் தற்போது கடலூர் மத்திய சிறை நிர்வாகம் ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி சிறையில் சவுக்கு சங்கரை, பார்வையாளர்கள் சந்திக்க இன்று முதல் ஒரு மாதத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை கடலூர் மத்திய சிறை நிர்வாகம் கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications