தந்தை மறைவால் NIA விசாரணைக்கு போகாத நாம் தமிழர் இடும்பாவனம் கார்த்தி- பிப்.8-ல் ஆஜராக உத்தரவு!
சென்னை: இந்தியாவில் தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை உயிர்ப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டவர்களுடன் தொடர்பிருப்பதாக நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை செயலாளர் இடும்பாவனம் கார்த்தி பிப்ரவரி 8-ந் தேதி ஆஜராக தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் (NIA,என் ஐஏ) உத்தரவிட்டுள்ளனர்.
2009-ம் ஆண்டு மே மாதம் இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தத்துடன் தமிழருக்கு தனிநாடு கோரி ஆயுதப் போராட்டம் நடத்திய தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் முடிவுக்கு வந்துவிட்டது. இந்த இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது.

ஆனால் தடை செய்யப்பட்ட இயக்கத்தின் தலைவர் பிரபாகரன், புலிகள் இயக்க கொடி ஆகியவற்றை நாம் தமிழர் கட்சி என்ற பெயரில் திரைப்பட இயக்குநர் சீமான் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார். இதுவரை மத்திய அரசு நாம் தமிழர் கட்சி, சீமான் தரப்பு மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வந்தது.
இந்நிலையில் திடீரென தமிழ்நாடு முழுவதும் நாம் தமிழர் கட்சி முக்கிய நிர்வாகிகள் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனைகளில் செல்போன்கள், லேப்டாப்கள், புத்தகங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை உயிர்ப்பிக்க ஆயுத கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களுடன் தொடர்பு உள்ளதா? என்ற சந்தேகத்தின் பேரில் இந்த சோதனையை என்.ஐ.ஏ. அதிகாரிகள் மேற்கொண்டனர்.
மேலும் நாம் தமிழர் கட்சி நிர்வாகி இடும்பாவனம் கார்த்தி, விசாரணைக்கு நேரில் ஆஜராகவும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சம்மன் அனுப்பினர். இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. இதனையடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் முன்பாக நேற்று இடும்பாவனம் கார்த்தி ஆஜராக இருந்தார். ஆனால் அவரது தந்தை நேற்று மறைந்ததால் விசாரணைக்கு ஆஜராகவில்லை.
இதனையடுத்து வரும் 8-ந் தேதி விசாரணைக்கு இடும்பாவனம் கார்த்தி ஆஜராக வேண்டும் என என்.ஐ.ஏ. அதிகாரிகள் சம்மன் அனுப்பி உள்ளனர். அன்றைய தினம் நடைபெறும் விசாரணைக்கு இடும்பாவனம் ஆஜராவாரா? அல்லது அவகாசம் கேட்கப்படுமா? என்பது விரைவில் தெரியவரும்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications