தமிழகத்தில் இனி கொரோனா தடுப்பூசி கட்டாயமல்ல.. விரும்பினால் செலுத்திக் கொள்ளலாம்.. தமிழக அரசு
சென்னை: கொரோனா கட்டுப்பாடுகளை திரும்ப பெறுவதாக அறிவித்த நிலையில் தமிழக அரசு தடுப்பூசி செலுத்தி கொள்வது இனி கட்டாயமல்ல என அறிவித்துள்ளது.
நாட்டில் கடந்த 2019ஆம் ஆண்டு இறுதி முதலே கொரோனா எனும் வைரஸ் தொற்று பரவி வருகிறது. இது முதல் அலை, இரண்டாவது அலை, மூன்றாவது அலை என பரவி வருவதால் நாடு முழுவதும் மாநிலங்களில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு ஏற்ப கட்டுப்பாடுகளும் தளர்வுகளும அறிவிக்கப்பட்டு வந்தன.

மூன்றாவது அலை
தமிழகத்தை பொருத்தமட்டில் மூன்றாவது அலை காரணமாக கொரோனா தொற்று உச்சத்தில் இருந்து தற்போது குறைந்துவிட்டது. இந்த நிலையில் கொரோனா நெறிமுறைகளும் கட்டுப்பாடுகளும் மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவுக்கு வந்ததாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

மாநில அரசுகள்
இது தொடர்பாக முடிவுகளை அந்தந்த மாநில அரசுகளே எடுத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையிலதான் கொரோனா கட்டுப்பாடுகளை முடிவுக்கு கொணடு வருவதாக மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் அறிவித்தன. மாஸ்க், சானிடைசர் போன்ற விஷயங்களை மக்கள் விரும்பினால் பின்பற்றிக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது.

கொரோனா கட்டுப்பாடுகள்
இந்த நிலையில் தமிழகத்திலும் கொரோனா கட்டுப்பாடுகள திரும்ப பெறப்படுவதாக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. பொது சுகாதாரத் துறை சட்டத்தின்படி இந்த கட்டுப்பாடுகளை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் முகக் கவசம் அணிவதும் தனி மனித இடைவெளி பின்பற்றுவதும் பொதுமக்களின் விருப்பம்.

தடுப்பூசி செலுத்தாதவர்கள்
தடுப்பூசி செலுத்தாதவர்கள் இனி தாமாக முன் வந்து அதை செலுத்திக் கொள்ளலாம். அதாவது இனி கொரோனா தடுப்பூசி என்பது கட்டாயமல்ல. பொது மக்கள் சுய விருப்பத்தின் அடிப்படையில் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை முதல் தவணை தடுப்பூசியை 92 சதவீதம் பேரும் 2ஆம் தவணை தடுப்பூசியை 75 சதவீதம் பேரும் செலுத்திக் கொண்டுள்லனர்.
-
அண்ணாமலை போட்டி இல்லை! கோவை வடக்கில் வானதி, மயிலாப்பூரில் தமிழிசை.. பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு -
தமிழ்நாடு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்.. யார் இவர்? வெங்கடராமனை மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவு -
சூடுபிடிக்கும் தேர்தல் களத்தில்.. கொட்டி தீர்க்க போகுது மழை.. 2 நாட்களுக்கு குளுகுளு கிளைமேட் தான்! -
மத்திய அரசின் முடிவு.. கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது.. தமிழச்சி தங்கப்பாண்டியன் பதிவு -
"அண்ணாமலை ஆதரவாளரா?You are rejected!" புதிய பிரச்சார வாகனத்துடன்நொந்து போன அமர்பிரசாத் ரெட்டி ! -
RTE admissions: தனியார் பள்ளிகளில் இலவச கல்வி! ஆர்டிஇ சேர்க்கை எப்போது? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? -
ஆத்தாடி இம்புட்டு கோடியா? ‘பறிமுதல்’ பணத்தை மீட்பது எப்படி? உரிமை கோராத பணம் என்ன ஆகும்? -
தமிழகத்தின் 44 தனித்தொகுதிகளில் 90% வேட்பாளர்கள் தகுதி நீக்கம்? அர்ஜுன் சம்பத் பொதுநல வழக்கு -
Spot the difference: இந்த இரு படங்களுக்கிடையே 3 வித்தியாசங்களை கண்டுபிடியுங்கள்! சவாலுக்கு ரெடியா? -
இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு! காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஏன் இழுபறி? -
ஏழை மாணவர்களுக்கு சூப்பர் சான்ஸ்.. தனியார் பள்ளிகளில் LKG முதல் இலவசம்.. ஹென்றி சொன்ன தேதியை பாருங்க -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம்












Click it and Unblock the Notifications