ஓமிக்ரான் அறிகுறிகள்: காய்ச்சல் வராது... தலைவலி உடல்சோர்வுதான் ஏற்படுமாம் - நிபுணர்கள் கருத்து
ஓமிக்ரான் பாதிக்கப்பட்ட நபருக்கு காய்ச்சல் வராது என்றாலும் கடுமையான தலைவலி மற்றும் சோர்வு காணப்படும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர்.
சென்னை: ஓமிக்ரான் பற்றி பயம் கொள்ள தேவையில்லை என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஓமிக்ரான் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரும்பாலும் உடல் நிலை சோர்வாக இருக்கும் தலைவலி ஏற்படும் என்று அதன் அறிகுறிகள் பற்றி தென்னாப்பிரிக்க மருத்துவ சங்கத்தின் தலைவர் ஏஞ்சலிக் கோட்ஸி தெரிவித்துள்ளார்.
Recommended Video
தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாற்றம் அடைந்த ஓமிக்ரான் வகை கொரோனா கிருமி, இதுவரை 30 நாடுகளுக்கு பரவியிருக்கிறது. அமெரிக்காவில் நேற்று வரை கலிபோர்னியா, கொலராடோ, மினிசோட்டா ஆகிய மாநிலங்களில் தலா ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது நியூயார்க்கிற்கும் ஒமிக்ரான் பரவியிருக்கிறது. நியூயார்க்கில் 5 பேருக்கு ஓமிக்ரான் கிருமி தொற்று ஏற்பட்டிருப்பதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. இதனால் அமெரிக்காவில் உருமாறிய ஓமிக்ரான் கிருமி தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது.

உலக மக்களை மீண்டும் பீதியில் ஆழ்த்தியுள்ளது ஓமிக்ரான் வைரஸ், இதனிடையே இந்த நோய் பற்றியும் அறிகுறிகள் பற்றியும் விளக்கம் அளித்துள்ள தென்னாப்பிரிக்க மருத்துவ சங்கத்தின் தலைவர் ஏஞ்சலிக் கோட்ஸி,நவம்பர் 18 ஆம் தேதி முதல் தென்னாப்பிரிக்காவில் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் உடனடியாக உயரத் தொடங்கவில்லை, ஆனால் இந்த வாரம் அவை உயரத் தொடங்கின மற்றும் அதிகரிப்பு மிகவும் குறிப்பிடத்தக்கதாக உள்ளது. எனவே இது வேகமாகப் பரவும் வைரஸ் என்பதை நாங்கள் அறிவோம்.
இவை ஆரம்ப கட்டத்தில் தான் உள்ளது, இனி வரும் காலங்களில் இதன் வீரியம் பற்றி தெரிய வரும். மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை தற்போது வரை குறைவாகத்தான் உள்ளது.
தற்போதைக்கு, தடுப்பூசிகள் இந்த காலகட்டத்தில் உங்களை நோயிலிருந்து பாதுகாக்கும் என்பதை நாங்கள் அறிவோம், ஏனெனில் இளம் வயது மற்றும் இணை நோய்கள் உள்ளவர்கள் யாராக இருந்தாலும், தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு லேசான அறிகுறிகள் தான் உள்ளது என்று கூறியுள்ளார்.
இது ஆரம்ப கட்ட நிலையில் உள்ள டெல்டா மாறுபாட்டை விட பாதிப்பு குறைவாகத் தான் உள்ளது. ஆரம்ப கட்டத்தில் தான் உள்ளோம். இனி வரும் காலங்களில் இதன் வீரியம் பற்றி தெரிய வரும். மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை குறைவாகத்தான் உள்ளது.
ஓமிக்ரான் பெரும்பாலும் உடல் நிலை சோர்வாக இருக்கும். அது உடல்வலி மற்றும் தலைவலியாக இருக்கும். பாதிக்கப்பட்ட நபருக்கு கடுமையான தலைவலி மற்றும் சோர்வு காணப்படும். வாசனையின்மை,சுவை இழப்பு, அல்லது கடுமையான காய்ச்சல் பற்றி யாரும் குறிப்பிடவில்லை. ஒமிக்ரான் பற்றி பயம் கொள்ள தேவையில்லை என்றும் கூறியுள்ளார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications