கொளுத்தும் வெயில்.. வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!

Subscribe to Oneindia Tamil

சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் எனவும், தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

ஊட்டி வானிலை நிலவரத்தை பொறுத்தளவில் பகல் நேரத்தில் அதிகபட்சமாக 24 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் வாட்டி வருகிறது.

தமிழகத்தில் கோடை காலம் துவங்குவதற்கு முன்னதாக தற்போது மார்ச் மாதத்திலேயே மாநிலம் முழுவதும் கடும் வெயில் கொளுத்தி வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகத்தின் பல பகுதிகளில் லேசான மழை பெய்த நிலையில் மீண்டும் வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.

தமிழகத்தில் வறண்ட வானிலை

தமிழகத்தில் வறண்ட வானிலை

இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் எனவும், தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள தகவலின் படி, " 12.03.2022 முதல் 14.03.2022 வரை: தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என கூறப்பட்டுள்ளது

லேசான/ மிதமான மழை

லேசான/ மிதமான மழை

தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்க கடல், பூமத்திய ரேகை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 15.03.2022 அன்று தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான/ மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை வானிலை

சென்னை வானிலை

16.03.2022 அன்று மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான/மிதமான மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை இல்லை

மீனவர்களுக்கு எச்சரிக்கை இல்லை

காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மழை அளவு ஏதுவும் பதிவாகவில்லை. மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை." என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+