ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு அழைத்து போகலாம் என ஓபிஎஸ் இந்த 2 பேரிடம் சொன்னார்.. போட்டு உடைத்த ஜேசிடி!
சென்னை : ஜெயலலிதாவை உயர் சிகிச்சைக்கு வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்லலாம் என ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர் எஸ்.பி.வேலுமணி ஆகியோரிடம் நேரடியாகவே கூறினார் எனக் கூறி பரபரப்பைக் கிளப்பியுள்ளார் ஓபிஎஸ் ஆதரவாளரான ஜேசிடி பிரபாகர்.
ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பான விசாரணைக்காக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை நேற்று வெளியிடப்பட்ட நிலையில், அதில் பல்வேறு பகீர் தகவல்கள் வெளிப்பட்டன.
ஜெயலலிதாவை உயர் சிகிச்சைக்காக வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்லும் முயற்சி சிலரால் தடுக்கப்பட்டதாக அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்களான வைத்திலிங்கம்,மானோஜ் பாண்டியன், ஜே.சி.டி பிரபாகர் ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களை சந்தித்தனர்.

பரபர விசாரணை அறிக்கை
ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணைய விசாரணை அறிக்கை சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஜெயலலிதாவை உயர் சிகிச்சைக்கு வெளிநாடு அழைத்துச் செல்ல மருத்துவர் ரிச்சர்ட் பீலே பரிந்துரை செய்தார் என்றும், அதற்கு சசிகலா தடையாக இருந்ததாகவும் ஆறுமுகசாமி ஆணையம் குற்றம்சாட்டியுள்ளது. ஜெயலலிதாவை சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்துச் சென்றால், அது இந்திய மருத்துவர்களை அவமதிக்கும் செயல் என சுகாதாரத்துறை செயலராக இருந்த ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஓபிஎஸ் அணியினர்
ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை பெரும் பரபரப்பைக் கிளப்பி இருக்கும் நிலையில் இன்று ஓபிஎஸ் தரப்பின் முக்கிய புள்ளிகள் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய ஜேசிடி பிரபாகர், "ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு செய்திகள் பற்றியும் நாங்கள் விரிவாக பார்த்து வருகிறோம். விசாரணை கமிஷன் கொடுத்திருக்கும் அறிக்கையின் அடிப்படையில் அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பதைப் பொறுத்து எங்கள் முடிவுகளையும், கருத்தையும் தெரிவிப்போம்.

ஒரு முக்கியமான விஷயம்
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆறுமுகசாமி ஆணையத்தில் அளித்த வாக்குமூலங்களை முழுமையாக ஆறுமுகசாமி ஆணையம் வெளியிடவில்லை. குறிப்பிட்ட சில பகுதிகளை மட்டும் எடுத்து அந்த அறிக்கையில் வெளியிட்டுள்ளனர். ஓ.பன்னீர்செல்வம் விசாரணையின்போது தெரிவித்த ஒரு முக்கியமான விஷயத்தை இங்கே சொல்கிறேன்.

விஜயபாஸ்கர், வேலுமணியிடம்
பேரறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர் ஆகியோரை சிகிச்சைக்காக வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்றது போல, ஜெயலலிதாவை உயர் சிகிச்சைக்கு வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்லலாம் என ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோரிடம் நேரடியாக கூறினார். அதற்கான ஏற்பாடுகளைச் செய்யலாம் எனக் கூறினார்.

அப்பல்லோ தலைவரே
நாங்கள் மற்றவர்களையும் ஆலோசித்து விட்டுச் சொல்கிறோம் என அவர்கள் கூறினர். ஆனால் அவர்கள் அப்பல்லோ மருத்துவமனை தலைவரிடம் கலந்துரையாடியுள்ளனர். அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை நன்றாக நடைபெற்று வருகிறது. இன்னும் ஒரு வாரத்தில் அவர் வீடு திரும்புவார், இதனால் இப்போது வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று அப்பல்லோ தலைவரே ஓபிஎஸ்ஸிடம் தெரிவித்தார். இந்த விவரத்தை ஆணையத்தில் ஓபிஎஸ் கூறியுள்ளார்.

ஓபிஎஸ் மனக் கவலை
ஓ.பன்னீர்செல்வத்தை பொறுத்தவரை, அவரது மனக் கவலை எல்லாம் இதைவிட சிறப்பாக ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கவேண்டும், குணமடைய வேண்டும் என்றுதான் விரும்பினார். விசாரணை ஆணையத்திலும், பொதுவெளியிலும் ஓபிஎஸ் சொல்லி வருவதுதான் உண்மை. ஜெயலலிதா இறந்த மனக்கவலை இன்னும் ஓபிஎஸ் உள்ளத்தில் இருப்பதை நாங்கள் பார்க்கிறோம்." எனத் தெரிவித்துள்ளார்.
-
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக?












Click it and Unblock the Notifications