பத்மா சேஷாத்ரி பள்ளி.. பாலியல் தொல்லைகளை தடுப்பது எப்படி? கல்வியாளர் தமிழரசி சிவக்குமார் பேட்டி
சென்னை: பத்மா சேஷாத்ரி பள்ளியில் மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் குறித்து கல்வியாளர் தமிழரசி சிவக்குமார் பேட்டி அளித்துள்ளார். இது போன்ற சம்பவங்களுக்கு தீர்வு என்ன, இதை எப்படி தடுப்பது என்று விளக்கம் அளித்துள்ளார்.
பத்மா சேஷாத்ரி பள்ளியில் மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2-3 நாட்களில் பலர் இது தொடர்பாக இணையத்தில் புகார் அளித்துள்ளனர். போலீஸ் அளித்த உதவி எண்ணுக்கும் 30 மாணவிகள் வரை பத்மா சேஷாத்ரி பள்ளி குறித்து புகார் அளித்துள்ளனர்.

இது தொடர்பாக இணையத்தில் பல மாணவிகள் அடுத்தடுத்து புகார்களை அடுக்கியபடி உள்ளனர். கைது செய்யப்பட்ட ஆசிரியர் ராஜகோபாலன் மட்டுமின்றி இன்னும் பல ஆசிரியர்கள் இப்படி உள்ளே இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த பத்மா சேஷாத்ரி பள்ளி விவகாரம் மக்கள் இடையே கொதிப்பை ஏற்படுத்தி உள்ளது. முக்கியமாக கல்வியாளர்கள் மத்தியில் இந்த பள்ளி விவகாரம் கடும் விமர்சனத்தை சந்தித்துள்ளது. இது போன்ற பள்ளியில் நடக்கும் பாலியல் குற்றங்களுக்கு என்ன காரணம் என்று கல்வியாளர் தமிழரசி சிவக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

தவறுகள் நடப்பது எங்கே? ஏன் ஆசிரியர்கள் இப்படி தவறு செய்கிறார்கள், சமுதாயமாக நாம் இதை எப்படி சரி செய்ய வேண்டும் என்று என்று கல்வியாளர் தமிழரசி சிவக்குமார் விளக்கம் அளித்துள்ளார். ஒன்இந்தியா தமிழுக்கு அளித்த பேட்டியில், மாணவிகள் படும் அவலங்கள் குறித்தும், அதற்கான தீர்வு குறித்தும் தமிழரசி சிவக்குமார் பட்டியலிட்டுள்ளார்.
இந்த பேட்டியின் முழு வீடியோவை நீங்கள் இங்கே காணலாம்!











Click it and Unblock the Notifications