தட்டித் தூக்கிய பாலக்கோடு.. சென்னை வழக்கம்போல மிக மிக மோசம். சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம்
சென்னை: தமிழகத்தில் நேற்று நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அதிகபட்சமாக பாலக்கோடு தொகுதியிலும், குறைந்தபட்சமாக வில்லிவாக்கம் தொகுதியிலும் வாக்குகள் பதிவாகியுள்ளன.
தமிழகத்திலுள்ள 234 தொகுதிகளிலும் நேற்று ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற்றது. கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்குகளைச் செலுத்தினர்.
வாக்குப்பதிவு மையங்களில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாகப் பின்பற்றப்பட்டது. வாக்களிக்க வரும அனைவருக்கும் மாஸ்க்குகளும் க்ளவுஸ்களும் கட்டாயமாக்கப்பட்டிருந்தது

72.78% வாக்குகள் பதிவு
நேற்று மாநிலம் முழுவதும் மிகவும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. வெகு சில இடங்களில் மட்டுமே சிறியளவில் வன்முறை ஏற்பட்டது. அதுவும் உடனடியாக கட்டுப்படுத்தப்பட்டது. இந்நிலையில், இந்தத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் 72.78% வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

பாலக்கோடு, எடப்பாடி தொகுதிகளில் அதிகம்
அதிகபட்சமாகத் தர்மபுரி மாவட்டத்திலுள்ள பாலக்கோடு தொகுதியில் 87.33% வாக்குகள் பதிவாகியுள்ளன. அதைத் தொடர்ந்து கரூர் மாவட்டத்திலுள்ள குளித்தலை தொகுதியில் 86.15% பேர் வாக்களித்துள்ளனர். அதேபோல முதல்வர் பழனிசாமி போட்டியிடும் எடப்பாடி தொகுதியில் 85.6% வாக்குகளும், தேனி வீரபாண்டி தொகுதியில் 85.53% வாக்குகளும் திண்டுக்கல் ஒட்டன் சத்திரம் தொகுதியில் 85.99% வாக்குகளும் பதிவாகியுள்ளன.

சென்னை ரொம்ப மோசம்
அதேபோல குறைந்தபட்சமாக வில்லிவாக்கம் தொகுதியில் 55.52% வாக்குகள் பதிவாகியுள்ளன. அதைத்தொடர்ந்து தி.நகரில் 55.92% பேரும் வேளச்சேரியில் 55.95% பேரும் வாக்களித்துள்ளனர். மேலும், மயிலாப்பூர் தொகுதியில் 56.59% வாக்குகளும் அண்ணாநகரில் 57.02% வாக்குகளும் பதிவாகியுள்ளன. இந்த ஐந்து தொகுதிகளும் சென்னையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மாவட்ட ரீதியிலான வாக்குப்பதிவு
மாவட்ட வாரியாக பார்க்கும்போது கரூரில் அதிகபட்சமாக 83.92% வாக்குகள் பதிவாகியுள்ளது. அதைத்தொடர்ந்து அரியலூர் மாவட்டத்தில் 82.47%, தர்மபுரி மாவட்டத்தில் 82.35%, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 80.15% வாக்குகள் பதிவாகியுள்ளன. அதேபோல குறைந்தபட்சமாகச் சென்னையில் வெறும் 59.06% வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. அதைத்தொடர்ந்து திருநெல்வேலியில் 66.65% செங்கல்பட்டில் 68.18% வாக்குகள் பதிவாகியுள்ளன.
-
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி












Click it and Unblock the Notifications