நாடாளுமன்றத்தில் கண்ணீர் மல்க உரை.. பிரதமர் மோடி போன்ற ஒப்பற்ற தலைவர்களை காண்பது அரிது.. ஓபிஎஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரதமர் மோடி போன்ற ஒப்பற்ற தலைவர்களை காண்பது அரிது என துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் பாராட்டு தெரிவித்தார்.

சுயசார்பு திட்டத்தின் கீழ் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அர்ஜுன் மார்க் 1ஏ டாங்கியை இந்திய ராணுவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி நேரு உள்விளையாட்டரங்கில் அர்ப்பணித்தார். இதையடுத்து விழா அரங்கிற்கு வந்த பிரதமரை முதல்வரும், துணை முதல்வரும் வரவேற்றனர்.

Paneer Selvam praises PM Narendra Modi for his emotional speech in Parliament

விழா மேடையில் வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து முதல்வரும், துணை முதல்வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு நினைவுப் பரிசை வழங்கினர்.

இந்த விழாவில் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் ஆற்றிய வரவேற்புரையில், பாரத தேசத்தின் பாதுகாவலர், பாமரர்களின் சேவகர் பிரதமர் மோடி ஜியை வருக வருக என வரவேற்கிறேன். தமிழகத்துக்கு நலன்தரும் திட்டங்களை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி.

பிரதமர் வருகையால் தமிழகம் சிறப்பு கவனம் பெற்றுள்ளது. சிறந்த முதலீட்டுக்கான தளமாக தமிழகம் மாறி உள்ளது. சிறந்த மாநிலத்துக்கான விருதுகளை தமிழகம் 3 முறை பெற்றுள்ளது. நல் ஆளுமைக்கான மத்திய அரசு விருதை தமிழக அரசு பெற்றுள்ளது.

காவிரி நதிநீர் பிரச்சனை உள்ளிட்டவைகளில் தமிழகத்துக்கு மத்திய அரசு உறுதுணையாக உள்ளது. மத்திய பட்ஜெட் 2021-ல் தமிழகத்துக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சென்னை ஐஐடிக்கு 163 ஏக்கர் நிலத்தை இலவசமாக வழங்கினார் ஜெயலலிதா.

நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் மக்களவை தலைவர் குலாம் நபி ஆசாத்தின் பதவிக் காலம் முடிவடைந்த போது பிரதமர் மோடி கண்ணீர் மல்க ஆற்றிய உணர்ச்சிவயமான உரையை நாம் பார்த்தோம். பிரதமர் மோடி போன்ற ஒப்பற்ற தலைவர்களை காண்பது அரிது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+