நெருங்கும் தேர்தல்.. இன்றும் உயராத பெட்ரோல், டீசல் விலை.. நேற்றைய விலையில் விற்பனை!
சென்னை: பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. நேற்று விற்கப்பட்ட விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது.
5 மாநில சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த இரண்டு நாட்களாக குறைக்கப்பட்டது. தேர்தலை முன்னிட்டு பெட்ரோல் டீசல் விலையில் ஏற்றம் செய்யப்படவில்லை. தொடர்ந்து கடந்த 26 நாட்களாக இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையில் எந்த ஏற்றமும் செய்யப்படவில்லை.
இந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றம் எதுவும் ஏற்படவில்லை.
சென்னையில் பெட்ரோல் விலை 91.93 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை 86.11 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.டெல்லியில் பெட்ரோல் விலை 96.3 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை 81.11 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஹைதராபாத்தில் பெட்ரோல் விலை 86.00 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை 85.09 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
பெங்களூரில் பெட்ரோல் விலை 94.3 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை 87.11 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மும்பையில் பெட்ரோல் விலை 97.21 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை 88.26 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
தினமும் எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தலாம் என்று விதி கொண்டு வந்த பின் தினமும் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டது.தமிழ்நாடு, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம், கேரளா ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதன் காரணமாகவே இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை கட்டுப்படுத்தப்படுகிறது.