குணமடைந்த கொரோனா நோயாளிகள்..சென்னை ஆய்வு.... பிளாஸ்மாவில் அதிர்ச்சி தகவல்!!
சென்னை: கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்களுக்கு விரைவாகவே உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து விடுகிறது என்று சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பிளாஸ்மாவுக்கான ரத்த சேகரிப்பில் இருந்து இது தெரிய வந்துள்ளது.
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா தெரபி அளிக்கப்படுகிறது. இதற்காக இந்த நோயில் குணமடைந்த போலீசார் முதல் ரத்த தானம் செய்து வருகின்றனர். இங்கு துவங்கப்பட்டு இருக்கும் ரத்த வங்கிக்கு இதுவரை 200 பேர் ரத்ததானம் செய்துள்ளனர். சிலர் அடிக்கடி ரத்த தானம் செய்து வருகின்றனர்.
இதையடுத்து அடிக்கடி ரத்த தானம் செய்பவர்களின் ரத்தம் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதில் நோய் எதிர்ப்பு சக்தி கொடுக்கும் IgG antibodies அளவு குறைந்து இருப்பது தெரிய வந்துள்ளது.

நோய் எதிர்ப்பு
இந்த ரத்த மாதிரிகளில் டைடர் (Titer) எனப்படும் நோய் எதிர்ப்பு சக்தி அளவை கண்டறிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், அடிக்கடி ரத்த தானம் செய்வர்களின் ரத்தத்தில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து இருப்பது தெரிய வந்துள்ளது. குறிப்பாக மே 25ஆம் தேதி ரத்த தானம் செய்தவரின் நோய் எதிர்ப்பு சக்தி மதிப்பு 4.6 ஆக இருந்துள்ளது. இதுவே, ஜூன் 27ஆம் தேதி அதே நபர் ரத்ததானம் செய்தபோது, நோய் எதிர்ப்பு சக்தி 3.69 ஆக குறைந்துள்ளது. இதுவே ஆகஸ்ட் 7ஆம் தேதி 2.96 ஆக குறைந்துள்ளது.

ரத்த தானம்
இதேபோல் மற்றொருவர் ஜூன் 24ஆம் தேதி ரத்த தானம் செய்து இருந்தார். இதில் நோய் எதிர்ப்பு சக்தி 7.76 இருந்துள்ளது. ஆகஸ்ட் 20ஆம் தேதி நோய் எதிர்ப்பு சக்தி 5.99 ஆக குறைந்துள்ளது.

பலன் இல்லை
இதுகுறித்து முன்னாள் சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் கே. குழந்தைசாமி அளித்து இருக்கும் பேட்டியில், ''நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து இருக்கலாம். ஆனால், நோய் எதிர்ப்பு முன்பு உருவானதை வைத்து உடனடியாக எதிர்ப்பை காட்டும். மீண்டும் வைரஸ் உடலுக்குள் உருவானால், உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு அந்த வைரஸை அடையாளம் கண்டு, நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும். ரத்தத்தில் நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும்போது ரத்த தானம் செய்வதால் எந்த பலனும் இல்லை என்று மூத்த மருத்துவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்த ஆய்வுக்கு புள்ளி விவரங்களை சேகரித்து வருகிறோம்'' என்றார்.

உறுதியான தகவல் இல்லை
பொதுவாக வைரஸ் போன்ற நோய்கள் ஒருமுறை உடலில் ஏற்பட்டால், அதற்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தி உடலில் உருவாகி விடும். கொரோனா வைரஸ் விஷயத்தில், இந்த வைரஸ் புதிது என்பதால், நிறைய ஆய்வு முடிவுகள் வெளியான பின்னரே இதுகுறித்து உறுதியான தகவல்கள் தெரிய வரும்.
-
15 out of 16: சென்னை மாவட்டத்தில் எத்தனை தொகுதிகளில் திமுக போட்டி? சத்யராஜ் மகளுக்கு சீட் இல்லை! -
சென்னையில் 6 சிட்டிங் திமுக எம்எல்ஏக்களுக்கு ‘கல்தா’.. அண்ணா நகர் முதல் வில்லிவாக்கம் வரை.. லிஸ்ட் -
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
தலைநகர் சென்னையை மொத்தமாக அள்ள திமுக பிளான்.. 15 தொகுதிகளில் நேரடி போட்டி! 1ல் காங்கிரஸ்! -
Vijay: வேணும்னே பண்றாங்க.. 10 குற்றச்சாட்டுகளுடன் தலைமை செயலகத்துக்கு நேரில் போன விஜய்! -
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
சென்னையில் வீடுகளுக்கு குழாய் மூலம் கேஸ்.. கட்டணம், பாதுகாப்பு எப்படி.. அதிகாரி விளக்கம் -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி












Click it and Unblock the Notifications