தமிழர்களின் இட்லி, தோசை, வடை என அத்தனையும் எனக்கு பிடிக்கும்- மோடி
Recommended Video
சென்னை: தமிழர்களின் இட்லி, தோசை, வடை என அத்தனையும் எனக்கு பிடிக்கும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
சென்னையில் ஐஐடியின் 56-ஆவது பட்டமளிப்பு விழா இன்று நடைபெறுகிறது. இந்த விழாவில் கலந்து கொள்ள பிரதமர் மோடி சென்னை வந்துள்ளார்.

அவர் ஐஐடியில் இந்தியா- சிங்கப்பூர் ஹேக்கத்தான் போட்டியில் வெற்றி பெற்றோர் வைத்திருந்த கண்காட்சியை பார்வையிட்டார். அதற்கு முன்னதாக ஹேக்கத்தான் வெற்றியாளர்கள் முன் மோடி பேசுகையில் தமிழர்களின் விருந்தோம்பல் மிகச் சிறந்தது.
தமிழர்களின் இட்லி, தோசை, வடை என அத்தனையும் எனக்கு பிடிக்கும். இந்த உணவுகள் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் கொடுக்கும். சிறந்த கலாசாரம் மற்றும் பாரம்பரியம் கொண்டது சென்னை.
ஹேக்கத்தான் வெற்றிக்கும் உதவிய சிங்கப்பூர் கல்வித் துறை அமைச்சருக்கு எனது நன்றி. ஹேக்கத்தான் என்பது இளம் தலைமுறையினரின் அறிவுத் திறனை வளர்க்க உதவும்.
உலக பாரம்பரிய சின்னம் மாமல்லபுரம். கற்சிற்பங்கள், பழமையான கோயிலுக்கு பெயர் போன மாமல்லபுரத்தை இங்கு வந்திருக்கும் வெளிநாட்டு மாணவர்கள் சென்று பார்வையிட வேண்டும் என்றார் மோடி.












Click it and Unblock the Notifications