Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அப்பாகிட்ட சொல்லிடுங்க..எஸ்.ஆர்.எம் விடுதியில் திறக்காத கதவு! திறந்து பார்த்தால்.. காத்திருந்த ஷாக்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : சென்னை தாம்பரம் அடுத்த காட்டாங்குளத்தூர் பகுதியில் இயங்கி வரும் எஸ்.ஆர்.எம் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வரும் வடமாநிலத்தைச் சேர்ந்த மாணவன் சடலமாக மீட்கபட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை அருகே பொத்தேரி பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் குழுமத்துக்குச் சொந்தமான எஸ்.ஆர்.எம். பல்கலைக் பல்கலைக்கழகம் கடந்த சில வருடங்களாக செயல்பட்டு வருகிறது.

இங்கு தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கேரளம், கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு வட மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவ மாணவியர்கள் இங்கு விடுதியில் தங்கி கல்லூரியில் பயின்று வருகின்றனர்.

வடமாநில மாணவர்

வடமாநில மாணவர்

இந்நிலையில் B-TECH முதலாம் ஆண்டு பயின்று வரும் மத்திய பிரதேஷ் மாநிலத்தில் உள்ள சோங்காப்பூர் ரயில்வே நகர் பகுதியை சேர்ந்த சீனிவாச ராவ் என்பவருடைய மகன் முகிலு விஸ்வநாத்(19) என்கிற மாணவன் கடந்த வியாழக்கிழமை அன்று வழக்கம்போல் வகுப்புக்கு சென்று விட்டு தனது தங்கியிருந்த கல்லூரி வளாகத்தில் உள்ள (காரி) விடுதியில் தங்கியுள்ளார்.

மர்ம மரணம்

மர்ம மரணம்

கடந்த இரண்டு நாட்களாக முகிலு விஸ்வநாத் உடைய அறை கதவு திறக்காமல் இருந்த நிலையில் சந்தேகம் அடைந்த சக நண்பர்கள் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். இதனை எடுத்து முகுலு விஸ்வநாத் தூக்கில் தொங்கியபடி இறந்த நிலையில் இருப்பதை பார்த்த சக நண்பர்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

விசாரணை

விசாரணை

விடுதி மாணவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த மறைமலைநகர் போலீசார் பிரேதத்தை கைப்பற்றி உடற்குறைவுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து கொலையா, தற்கொலையா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடிதம் சிக்கியது

கடிதம் சிக்கியது

கல்லூரி வகுப்பு துவங்கி சில வாரங்களில் ஆன நிலையில் கல்லூரி மாணவன் உயிரிழந்திருப்பது மாணவர்களிடையும் பெற்றோர்களிடமும் அச்சத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் மாணவன் தனது கை பட எழுதிய லெட்டர் கிடைத்துள்ளது. அதனையும் கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த கடித்தத்தில் மாணவர் தனது தந்தையிடம் தகவல் தெரிவிக்க வேண்டி தொலைபேசி எண்ணையும் குறிப்பிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+