Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு..முதல்வர் அவசர ஆலோசனை..வெளியாகும் அதிரடி அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் ரேசன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகை வழங்குவது தொடர்பாக முதல்வர் மு.க ஸ்டாலின், இன்று ஆலோசனை மேற்கொண்டுள்ளார். தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனைக்கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, துரைமுருகன்,பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் சார்பில் சிறப்புத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், 2023 பொங்கல் பண்டிகைக்கான பரிசுத் தொகுப்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு என்னென்ன பொருட்கள் வழங்கலாம் என்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின், இன்று முக்கிய ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

Pongal parisu thoguppu: CM Stalin discussion with Ministers important announcement to be released

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வரும் இந்த ஆலோசனை கூட்டத்தில், நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், கூட்டுறவு மற்றும் உணவுத்துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

பொங்கல் பரிசுத் தொகையாக கடந்த ஆண்டு 21 பொருட்கள் வழங்கப்பட்டன. அந்த பொருட்கள் தரமற்றவையாக இருந்ததாக புகார் எழுந்தது. வெல்லம் உருகிவிட்டதாகவும் கலப்பட பொருட்களாக வழங்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்த நிலையில் இந்த ஆண்டு ரேசன் அட்டைதாரருக்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2023ஆம் ஆண்டு பொங்கல் பரிசாக அரிசி, சர்க்கரை, முந்திரி, ஏலக்காய், திராட்சை, கரும்பு ஆகியவற்றுடன் ரூ.1000 ரொக்கம் வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. அந்த தொகையை வங்கிக்கணக்கில் செலுத்தலாமா? ரேஷன் கடைகளின் மூலம் வழங்கலாமா என ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பில் 1000 ரூபாயுடன் என்னென்ன பொருட்கள் வழங்கலாம் என்று முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆலோசனை கூட்டத்திற்கு பின் பொங்கல் தொகுப்பு மற்றும் பரிசுத் தொகை குறித்து தமிழ்நாடு அரசின் சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

2.23 கோடி குடும்ப அட்டைகளில் 14.9 லட்சம் அட்டைகளில் வங்கிக்கணக்கு, ஆதார் இணைக்கப்படாமல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே ரேசன் கார்டுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இன்றைய ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000 குறித்த அறிவிப்பினை முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+