அடுத்த மாதம் தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடி.. கோவை, செங்கோட்டை மக்களுக்கு நல்ல செய்தி
பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் 8ஆம் தேதி தமிழ்நாடு வருகிறார்.
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் 8ஆம் தேதி தமிழ்நாடு வருகிறார். வரும் ஏப்ரல் 8ம் தேதி அன்று ரூ.294 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்களை தமிழ்நாட்டில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.
குறிப்பாக சென்னை- கோவை இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் திட்டத்தையும் தாம்பரம்- செங்கோட்டை ரயில் சேவையையும் தொடங்கி வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழ்நாட்டில் 294 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்டங்களை துவங்கி வைப்பதற்காக வருகின்ற ஏப்ரல் 8ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. குறிப்பாக நாட்டின் அதிவேக ரயில்சேவைகளில் ஒன்றான வந்தே பாரத் சென்னை கோவை இடையே இயக்குவதற்கு தெற்கு ரயில்வே பரிசீலித்து வந்தது. அந்த ரயில் சேவை 8ம் தேதி துவக்கப்பட உள்ளது.
ஏற்கனவே திருத்துறைப்பூண்டி முதல் அகஸ்தியம்பள்ளி வரையிலான மீட்டர் கேஜ் பாதை அகல ரயில் பாதையாக மாற்றப்பட்ட நிலையில், அங்கு இரண்டு ரயில்களை இயக்குவதற்கு திட்டமிடப்பட்டு, அந்த ரயில்கள் இயக்கமும் துவங்கப்பட இருக்கிறது. இதேபோல் தாம்பரம் முதல் செங்கோட்டை வரை வாரம் மும்முறை இயக்கக்கூடிய ரயில்களையும் பிரதமர் மோடி துவங்கி வைக்க உள்ளார்.
நாட்டின் அதிவேக ரயில்களான வந்தே பாரத் ரயில் தமிழகத்தில் ஏற்கனவே சென்னை சென்ட்ரல் முதல் மைசூரு வரை இயக்கப்பட்டு வருகிறது தற்போது இயக்கப்படும் சென்னை-கோவை வந்தே பாரத் ரயில் தமிழகத்தின் இரண்டாவது ரயில் ஆகும். அதேநேரம் தமிழகத்திற்குள் மட்டும் இயக்கப்படவுள்ள முதல் வந்தே பாரத் ரயில் சென்னை கோவை ரயில் ஆகும்.












Click it and Unblock the Notifications