மதுரை மாநகராட்சி சாலை சீரமைப்புக்கு சிறப்பு நிதி.. பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் குட் நியூஸ்!
சென்னை: மதுரை மாநகராட்சியில் சாலைகளை சீரமைப்பதற்காக கடந்த மூன்று மாதங்களில் 60 கோடி ரூபாய் அளவுக்கு நிதி பெற்றுத் தரப்பட்டு உள்ளதாக தமிழக நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
மதுரை மாநகராட்சிக்கு கடந்த 3 மாதங்களில் சிறப்பு நிதியாக 60 கோடி ரூபாயை தமிழக அரசிடமிருந்து அமைச்சர்கள் பெற்று தந்துள்ளனர் என்று மதுரை மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் நேற்று அளித்த பேட்டியில் தெரிவித்து இருந்தார்.
மேலும் அவர் கூறுகையில்..

சாலை மேம்பாடு
இவ்வாறு பெற்றுத்தந்த நிதி மூலம் முதற்கட்டமாக மாநகராட்சி முக்கிய சாலைகளை சீரமைக்க 20 கோடி ரூபாய்க்கு பணி நடைபெற உள்ளது. மாநகராட்சியில் உள்ள சுமார் 300 சாலைகளை சீரமைக்கும் பணி விரைவில் நடைபெற உள்ளது. மாநகராட்சி சுகாதார பணிகளை மேற்கொள்ள 15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

முதல்வர் உத்தரவு
சுகாதார பணிகளுக்காக தளவாடங்கள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட உள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவுபடி வைகை தென்கரை மற்றும் வடகரை விரிவாக்கப்பட்ட பகுதிகளில் திருப்பரங்குன்றம் திருநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பாதாள சாக்கடை விரைந்து அமைப்பதற்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

விரைவாக பணி
மாநகராட்சியில் வளர்ச்சி பணிகள் அனைத்தையும் விரைந்து முடித்திடவும், நிரந்தரத் தீர்வு காணும் விதமாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அமைச்சர் ட்வீட்
இந்த செய்தி துணுக்கை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் நிதி துறை அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன். இந்த நிதியை பெற்று தந்தது தொடர்பாக அவர் சில தகவல்களை டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ட்விட்டரில் கூறுகையில், மதுரை மாநகரில் 300 சாலைகளை மறுசீரமைக்க பல்வேறு இடங்களிலிருந்து ரூ.60 கோடி நிதியை நாங்கள் ஏற்பாடு செய்துள்ளோம் என்பதில் மகிழ்ச்சி. பல சாலைகள் மோசமான நிலையில் இருப்பது எனக்குத் தெரியும் ("ஸ்மார்ட் சிட்டி" வேலைகள் இதற்கு ஓரளவுக்கு காரணம்) கடந்த காலத்தைப் போலல்லாமல், முறையான, விரிவான "மீண்டும் முழுமையாக சாலை போடுவதை" உறுதிசெய்ய எங்களுக்கு சிறிது கால நேரம் பிடித்தது. இவ்வாறு பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
-
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக? -
PMK Ramadoss: பாமக ராமதாஸை தைலாபுரத்தில் சந்தித்தாரா செங்கோட்டையன்? நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications