"ஜனநாயக துரோகம்"... பெகாசஸ் விவகாரத்தை கையில் எடுத்த நாராயணசாமி.. வீடியோ போட்டு தாக்கு..!
நாராயணசாமி வீடியோ வெளியிட்டு மத்திய அரசை சாடியுள்ளார்
சென்னை: "இது ஜனநாயக துரோகம்... பெகாசஸ் மென்பொருள் வாங்கியது யார், எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டுள்ளது என்று நாடாளுமன்ற நிலை குழுவை அமைத்து விசாரணை நடத்த வேண்டும்" என்று நாராயணசாமி ஒரு கோரிக்கை விடுத்துள்ளார்.
Recommended Video
புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார்.. அந்த வீடியோவில் பேசியுள்ளதன் சுருக்கம் இதுதான்:
"இப்போது நமது நாட்டில் செல்போன் ஒட்டு கேட்பு விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது.. இஸ்ரேல் நிறுவனமான என்எஸ்ஓ நிறுவனம் தயாரித்துள்ள பெகாசஸ் என்ற சாப்ட்வேர் மூலம் ஏராளமானோர் செல்போன்கள் ஒட்டுகேட்கப்பட்டுள்ளது.. இது மிகப்பெரிய ஊழல்..

ஆட்சி கவிழ்ப்பு
இதை பல வருடங்களாக ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு மத்தியில் உள்ள மோடி அரசு பயன்படுத்தி வருகிறது.. பலரது ரகசியங்களை தெரிந்துகொள்ளவும் இந்த சாப்ட்வேர் பயன்படுத்தப்பட்டுள்ளது..
தனியார் நிறுவனத்திற்கு இந்த மென்பொருளை கொடுக்கமாட்டோம் என்றும், ஒரு அரசு கேட்டால் மட்டுமே கொடுப்போம் என்றும் இஸ்ரேல் நிறுவனம் சொல்கிறது..

எதிர்கட்சிகள்
அப்படியானால், இதிலிருந்து இந்திய நாட்டில் மோடி அரசானது மிகப்பெரிய விலையை கொடுத்து அந்த மென்பொருளை வாங்கி, செல்போனையும் ஒட்டுகேட்டுள்ளது.. நாடாளுமன்றத்தில் அனைத்து அரசியல் எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து நாடாளுமன்ற நிலை குழு வைத்து விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தது.. ஆனால், அதற்கு மோடி அரசு செவிசாய்க்கவில்லை..

மென்பொருள்
மத்திய அரசு தவறு செய்த காரணத்தால்தான், உளவுபார்த்த காரணத்தால்தான் அந்த விசாரணைக்கு மோடி அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. இது ஜனநாயக துரோகம். பெகாசஸ் மென்பொருள் வாங்கியது யார், எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டுள்ளது என்று நாடாளுமன்ற நிலை குழுவை அமைத்து விசாரணை நடத்த வேண்டும்..

தனி வார்டு
விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.. மோடி அரசு அந்த சட்டங்களை இன்னமும் திரும்ப பெறமால் உள்ளது.. இனியாவது 3 விவசாய விரோத சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்.. கொரோனா 3ஆவது அலையை சமாளிக்க அரசு தயாராக இருக்க வேண்டும்.. குழந்தைகளுக்காகவே தனியாக வார்டு அமைக்க வேண்டும்" என்றார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications