புழல் ஏரியில் இருந்து தண்ணீர் எடுப்பது நிறுத்தம்?.. சென்னையில் தண்ணீர் பஞ்சம் உச்சம்!
சென்னை: சென்னைக்கு குடிநீர் வழங்கப்படும் புழல் ஏரியில் இருந்து தண்ணீர் எடுப்பது இன்னும் இரண்டு வாரத்தில் நிறுத்தப்பட வாய்ப்பு இருப்பதால், சென்னையின் தண்ணீர் பஞ்சம் உச்சத்துக்கு சென்றுவிடும் அபாயம் எழுந்துள்ளது.
வடகிழக்கு பருவ மழை பொய்ந்து போனதால் சென்னையில் குடிநீர் பற்றாக்குறை இதுவரை இல்லாத அளவுக்கு நிலவுகிறது. ஏனெனில் சென்னையைச் சுற்றி இருக்கும் குடிநீர் ஆதார ஏரிகள் எல்லாம் வறண்டு காடுகளை போல் மாறிவிட்டன.
கோடை மழையாவது சென்னைக்கு கைகொடுக்கும் என்று எதிர்பார்த்தால் அதுவும் இதுவரை பெரிதாக பெய்யவில்லை. இதனால் சென்னையில் நீர் ஆதாரங்கள் வற்றிப்போனதுடன், நிலத்தடி நீர் மட்டமும் சரிந்துபோனது.

ஜுன் இறுதி வரை
இதனால் சென்னை நகரம் முழுவதுமே மக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். தற்போது நீர் உள்ள புழல், வீராணம் மற்றும் கல்குவாரிகளின் நீரை வைத்து ஜுன் மாதம் இறுதி வரை சமாளிக்க வேண்டி உள்ளது.

800 மிலி தேவை
தற்போது சென்னைக்கு முக்கிய நீர் ஆதாரமாக விளக்கும் புழல் ஏரியில் 45 மில்லியன் கனஅடி தண்ணீர் மட்டுமே உள்ளது. ராட்சத மோட்டார் மூலம் வினாடிக்கு 25 கனஅடி வீதத்தில் 75 மில்லியன் லிட்டர் தண்ணீர் தினமும் எடுக்கப்பட்டு வருகிறது. சென்னைக்கு தினமும் 800 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவை என்கிற நிலையில் 75 மில்லியன் லிட்டர் எந்த அளவுக்கு காணும் என்பதே பெரும் கேள்வி.

புழல் நீர் நிறுத்தம்
இந்த சூழலில் புழல் ஏரியில் இப்படியே தண்ணீர் எடுத்தால் 2 வாரங்களில் முழுமையாக வறண்டுவிடும்.அதன் பிறகு அங்கிருந்து சென்னைக்கு தண்ணீர் எடுக்க முடியாது. எனவே தண்ணீர் பஞ்சம் என்பது சென்னையில் மிகப்பெரிய அளவில் ஏற்படும் அபாயம் உள்ளது.

கேள்விக்குறி
இதனால் புதிய நீர் ஆதாரங்கள் மற்றும் கல்குவாரி நீர்களை சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் தேடிக்கொண்டு இருக்கிறார்கள். எனினும் இன்னும் குறைந்தது 45 நாட்களுக்கு சென்னைக்கு குடிநீர் பற்றாக்குறையை சமாளித்தால் தான் தென்மேற்கு பருவமழை மூலம் தப்ப முடியும் என்ற சூழல் உள்ளது. ஆனால் எப்படி அதிகாரிகள் சமாளிக்கப் போகிறார்கள் என்பது பெரும் கேள்வியாக உள்ளது.
-
உரிமைத் தொகை ₹1000 பதில் 2000 தந்தால்? சென்னை டூ திருச்சி சிறுமி சம்பவத்தில் பொங்கிய டிடிவி தினகரன் -
சென்னையில் திருச்சி மாணவி பாலியல் வன்கொடுமை புகார் பொய்யானது! அபிராமபுரம் போலீஸ் விளக்கம் -
கேஸ் சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்படும்.. தமிழக அரசு அதிரடி எச்சரிக்கை.. என்னாச்சு? -
வீட்டில் இருக்குற தண்ணி டேங்க் மட்டும் தான் கழட்டிட்டு வரல.. திரும்பி பார்க்க வைத்த சென்னைவாசி -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
சிலிண்டர் வரலை! ஆப்பம்லாம் பிறகு பார்ப்போம்! Variety rice கிடையாது! சென்னை ஆனந்தா ஹோட்டல் அறிவிப்பு -
சென்னை கிண்டி மேம்பாலத்தில் ஜொலித்த 1.5 கிலோ தங்கம்.. ஜிஎஸ்டி ஆபீசர் பின்னாடி போனால்? பெரிய ட்விஸ்ட் -
சென்னையில் தங்க ரதம்.. கண்டக்டர் இல்லாத பஸ்கள் அறிமுகம் செய்த அரசு.. எந்த ரூட்டில் இயக்கம்? -
மின்சார வாரியம் சர்ப்ரைஸ்.. தமிழகத்தில் திடீர்னு ஏறிய கரண்ட் தேவை! உடனே வந்த மின்வாரிய ஹேப்பி நியூஸ் -
சென்னை மொத்தமாக முடங்கியது.. சிலிண்டர் இல்லாமல் அடுத்தடுத்து மூடப்படும் உணவகங்கள். தவிக்கும் மக்கள் -
சென்னையில் புதிய அமெரிக்கத் துணைத் தூதராக மரியானா எல்.நெய்ஷுலர் பொறுப்பேற்பு -
சென்னை விடுதிகளில் டீ, காபி கிடையாது.. PG-க்கள் அறிவிப்பு! பேச்சுலர்களுக்கு திண்டாட்டம்தான்!











Click it and Unblock the Notifications