மீண்டும் வந்த சிபிஐ இயக்குனர்.. தூசு தட்டப்படும் ரபேல் பேரம்.. விசாரணைக்கு உத்தரவிடுவாரா?
சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா மீண்டும் பணிக்கு வந்துள்ள சூழ்நிலையில் அவர் ரபேல் விவகாரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னை: சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா மீண்டும் பணிக்கு வந்துள்ள சூழ்நிலையில் அவர் ரபேல் விவகாரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மாவை கட்டாய விடுப்பில் அனுப்பியது தவறு என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால் சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா மீண்டும் தனது பணியை தொடங்குகிறார்.
கடந்த இரண்டு மாதமாக நடந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் இன்று காலை சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா மீண்டும் தனது பணியை தொடங்கி உள்ளார்.

3 மாதம் முன் என்ன நடந்தது
கடந்த அக்டோபர் மாதமே சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா, ரபேல் ஊழல் குறித்து விசாரிக்க மிகவும் தீவிரம் காட்டினார். அப்போது இதுகுறித்து அலோக் வெர்மா இரண்டு முறை ஆலோசனை நடத்தினார். இதற்காக உச்ச நீதிமன்றத்தில் நடந்து வரும் விசாரணை குறித்த ஆவணங்களை ஏற்கனவே வாங்கி இருந்தார். அதன்பின்தான் இவர் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க தொடங்கியது.

ஆதாரங்களை திரட்டினார்
மேலும் ரபேல் ஊழலில் பிரசாந்த் பூஷன் உள்ளிட்ட மனுதாரர்கள் அளித்த ஆதாரங்களையும் திரட்டி விசாரிக்க முடிவு செய்து இருந்தார். இதற்காக தனி விசாரணை அணியை உருவாக்கும் திட்டத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் இவர் விடுமுறையில் இருக்கும் போதே இந்த வழக்கு முடிவிற்கு வந்துவிட்டது.

ஆவணம் கேட்டார்
கடந்த அக்டோபர் மாதம் இவர் பிரதமர் மோடியிடமும், மத்திய அரசிடமும் ரபேல் ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்களை கேட்டு இருந்தார். இவர் ரபேல் ஒப்பந்தம் குறித்த ஆவணங்களை கேட்டது எல்லோருக்கும் தெரியும். இந்த ஆவணங்களை இதுவரை பிரதமர் மோடி, நிர்மலா சீதாராமன் பார்த்து இருக்கிறார்கள். அதோடு ஒப்பந்தம் செய்த அனில் அம்பானி பார்த்து இருக்கிறார். அதைத்தான் இவர் விசாரிக்க எண்ணி கேட்டார்.

நடக்குமா
இந்த பரபரப்பான சூழ்நிலையில்தான் இவர் காலவரையற்ற கட்டாய விடுப்பில் செல்ல வேண்டும் என்று மோடி உத்தரவு பிறப்பித்தார். தற்போது அந்த உத்தரவு செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இவர் மீண்டும் ரபேல் விவகாரத்தை கையில் எடுப்பாரா என்ற கேள்வியை எழுந்துள்ளது.

வாய்ப்பு
முக்கியமாக, இந்த ரபேல் விவகாரத்தை விசாரிப்பது கொள்கை முடிவு கிடையாது. அதனால் ரபேல் குறித்து விசாரணைக்கு உத்தரவிட அலோக் வெர்மாவிற்கு முழு தகுதி உள்ளது. ஆனால் இவரின் பதவிக் காலம் இந்த மாத இறுதியில் முடிவதால், இவர் ரபேல் குறித்து நடவடிக்கை எடுப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications