சென்னையில் பரவலாக கனமழை
சென்னை: வங்கக் கடலில் உருவான தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமானதால் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்தது.
தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் இன்று பல இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்தது. அதன்படி சென்னையில் கனமழை பெய்தது. காலையில் கனமழை பெய்தததை அடுத்து சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
சென்னையில் எழும்பூர், புரசைவாக்கம், சென்ட்ரல் உள்பட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துள்ளது.
புதுவை, காரைக்காலில் விடுமுறை
இதேபோல் புதுச்சேரி, காரைக்காலில் கனமழை பெய்து வருவதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
Comments
English summary
Chennai may continue to receive intermittent showers for two or three days as a result of the well-marked low pressure area that is expected to intensify into a depression by Tuesday.
Story first published: Tuesday, December 3, 2013, 8:16 [IST]