அனைத்து தரப்பினருக்காகவும் போராடியவர் தேவர்! எந்நாளும் மக்கள் மனங்களில் வாழ்வார்! ராமதாஸ் புகழாரம்!
சென்னை: அனைத்து தரப்பு மக்களுக்காகவும் போராடியவர் முத்துராமலிங்கத் தேவர் என்றும் அவர் எந்நாளும் மக்கள் மனங்களில் வாழ்வார் எனவும் பாமக நிறுவனர் ராமதாஸ் புகழாரம் தெரிவித்துள்ளார்.
முத்துராமலிங்கத் தேவரின் 60வது குருபூஜை மற்றும் 115வது பிறந்தநாளான இன்று ராமதாஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ராமதாஸ் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது;

அரசியல் பொதுவாழ்வு
''அரசியலிலும், பொதுவாழ்க்கையிலும் சாதனைகளை படைத்த பசும்பொன் பெருமகனார் அவர்களின் 115-ஆவது பிறந்தநாளும், 60-ஆவது குருபூசையும் கொண்டாடப்படும் இந்த நாளில் அவரை அனைவரும் போற்றி வணங்குவோம். ஆங்கிலேயர்களுக்கு எதிரான விடுதலைப் போரில் அவரது பங்கு ஈடு இணையற்றது!''

நிலம் வழங்கினார்
''தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தமது நிலங்களை வழங்கியது, குற்றப்பரம்பரை சட்டத்திற்கு எதிராக போராடி வெற்றி பெற்றது, தொழிற்சங்க தலைவராக இருந்து தொழிலாளர்களுக்கு உரிமைகளை வென்றெடுத்துக் கொடுத்தது என பொதுவாழ்க்கையில் அவர் படைத்த சாதனைகள் ஏராளம்!''

மக்கள் மனங்களில்
''அனைத்துத் தரப்பு மக்களுக்காக அவர் ஆற்றிய பணிகள் தான் இன்று அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் அவரின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்துவதற்கு காரணம். தேவர் பெருமகனார் ஆற்றிய பணிகளின் மூலம் அவர் எந்த நாளும் மக்களின் மனங்களில் வாழ்வார் என்பது உறுதி.'' இவ்வாறு ராமதாஸ் கூறியிருக்கிறார்.

பாமக சார்பில்
இதனிடையே சென்னை நந்தனத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு பாமக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. ராமதாஸை போல் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் முத்துராமலிங்கத் தேவருக்கு பெருமை சேர்க்கும் வகையில் அவர் ஆற்றிய சாதனைகளை பட்டியலிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications