வேளச்சேரி வாக்குச்சாவடி எண் 92இல் மறுவாக்குப்பதிவு... இன்று மாலை ஓய்கிறது தேர்தல் பிரசாரம்
சென்னை: வேளச்சேரி வாக்குச்சாவடி எண் 92இல் வரும் 17ஆம் தேதி மறுதேர்தல் நடைபெறும் நிலையில், அதற்கான பிரசாரம் இன்றுடன் நிறைவடைகிறது.
தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாகக் கடந்த 6ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்றது. மாநிலம் முழுவதும் 72.8% வாக்குகள் பதிவானது. மாநிலத்தில் மிகவும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
இருப்பினும், வேளச்சேரி தொகுதியில் அன்றிரவு மூன்று வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்கூட்டரில் எடுத்துச் செல்லப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

வாக்குப்பதிவு இயந்திரம்
ஸ்கூட்டரில் வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்துச் சென்ற நபர்களை மடக்கிப்பிடித்த பொதுமக்கள், அவர்களை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். முதலில் அங்குப் பழுதான வாக்குப்பதிவு இயந்திரம் எனக் கூறப்பட்ட நிலையில், பின்னர் அந்த இயந்திரங்கள் சுமார் ஒரு மணி நேரம் வாக்குப்பதிவு நடைபெற்றது என்றும் அதில் 15 வாக்குகள் பதிவாகியிருந்தது என்றும் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்திருந்தார்.

ஒரு வாக்குச்சாவடியில் மறுதேர்தல்
இதனால் அந்த வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் எனக் காங்கிரஸ் உள்ளிட்ட பல வேட்பாளர்கள் வலியுறுத்தியிருந்தார். இதையடுத்து வேளச்சேரி வாக்குச்சாவடி எண் 92இல் 17ஆம் தேதி வாக்கிப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அந்தப் பகுதியில் மட்டும் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தது. இதில் வாக்காளர்களின் இடது கையின் நடுவிரலில் மை வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

தீவிர பிரசாரம்
தேர்தலில் ஒவ்வொரு வாக்குகளும் முக்கியமானது என்பதால் வேளச்சேரியில் போட்டியிடும் வேட்பாளர்கள் கடந்த சில தினங்களாகவே அங்குத் தீவிர பிரசாரத்தை மேற்கொண்டு வந்தனர். வாக்குச்சாவடி எண் 92இல் நாளை மறுநாள் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அங்குப் பிரசாரம் இன்றுடன் நிறைவடைகிறது. பிரசாரம் செய்ய இன்றே கடைசி நாள் என்பதால் அனைத்து வேட்பாளர்களும் அந்த பகுதியில் முகாமிட்டுள்ளனர்.

ஆண்கள் மட்டும்
முன்னதாக, மறுதேர்தல் நடைபெறும் இடத்தில் ஆண்கள் மட்டுமே மீண்டும் வாக்களிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரி பிரகாஷ் வெளியிட்ட அறிக்கையில், வேளச்சேரியில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் வாக்குச்சாவடி ஆண் வாக்காளர்களுக்கானது. எனவே, இங்கு வாக்களிக்கத் தகுதி பெற்ற 548 ஆண்கள் மட்டும் மறுதேர்தலின்போது வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications