Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பூந்தமல்லியில் ரூ.500 கோடி மதிப்புள்ள ஆக்கிரமிப்பு நிலம்.. பிரபல பள்ளியிடம் இருந்து அதிரடியாக மீட்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையை அடுத்த திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அருகே தனியார் இன்டர்நேஷனல் பள்ளி ஆக்கிரமிப்பு செய்திருந்த 25 ஏக்கர் நிலத்தை பூந்தமல்லி தாசில்தார் கோவிந்தராஜ் தலைமையில் வருவாய் துறை அதிகாரிகள் மீட்டனர். நசரத்பேட்டை போலீசாருடன் சென்று அதிரடியாக மீட்ட அதிகாரிகள், அந்த இடத்திற்கு நீதிமன்ற உத்தரவுப்படி சீல் வைத்தனர். மீட்கப்பட்ட நிலத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.500 கோடி என்று தெரிவித்தனர்.

சென்னை புறநகர் பகுதிகளில் நிலத்தின் மதிப்பு கடந்த 2011, 2012 வாக்கில் வெறும் 3 லட்சம் , 4 லட்சம் என்று இருந்த இடங்களில் எல்லாம் இன்று, 18 லட்சம் , 20 லட்சம் என்கிற அளவில் உயர்ந்துள்ளது. சென்னையில் ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் அசுர வளர்ச்சிக்கு பிறகு நிலத்தின் மதிப்பும் பல மடங்கு உயர்ந்துவிட்டது. இதனால் கடந்த 20 ஆண்டுகளில் நிலங்களை ஆக்கிரமிப்பதும் அதிகரித்தது. நீர் நிலைகள், நீர் வழிப்பாதைகள் என எல்லாவற்றையும் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி வளைத்து பட்டாவும் வாங்கினார்கள்.

Chennai land Poonamallee

அப்படி ஆக்கிரமித்த கட்டிடங்களால் தான், இன்றைக்கு சென்னை வெள்ளத்தில் மிதக்கிறது. இந்நிலையில் 2015 வெள்ளத்திற்கு பிறகு அரசு அதிரடியாக களம் இறங்கி, நீர்நிலை ஆக்கிரமிப்பு விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.. அதேபோல் அரசு நிலங்கள் எவை, எவை என்பதை தேடித்தேடி கண்டுபிடித்து அதிகாரிகள் மீட்டு வருகிறார்கள். அந்த வகையில் சென்னையை அடுத்த பூந்தமல்லி பகுதியில் 500 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை வருவாய் துறை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

குத்தகை நிலம்: பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கம் அருகே உள்ள கிராமம் பழஞ்சூர். இந்த பகுதியில் தனியார் இன்டர்நேஷனல் பள்ளி கொரோனாவிற்கு முன்பு வரை செயல்பட்டு வந்தது. பள்ளிக்கூடம் நடத்துவதற்காக 5 ஏக்கர் அரசு நிலத்தை அரசு குத்தகைக்கு எடுத்து இருந்தது. ஆனால் கொரோனா காலத்துக்கு பிறகு தனியார் செயல்படாமல் மூடப்பட்டது. இதனிடையே விதிமுறைகளை மீறி பள்ளி வளாகத்தை சுற்றியுள்ள சுமார் 20 ஏக்கர் நிலம் என மொத்தம் 25 ஏக்கர் நிலத்தை தனியார் பள்ளி ஆக்கிரமிப்பு செய்து செயல்பட்டு வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

பள்ளி நிர்வாகம் ஆக்கிரமிப்பு: இது ஒருபுறம் எனில், தனியார் இண்டர்நேஷனல் பள்ளி செயல்பட்டு வந்த நிலத்தின் குத்தகை காலம் 2013-ம் ஆண்டே முடிவடைந்த நிலையில், அரசுக்கு செலுத்த வேண்டிய குத்தகை பாக்கி தொகையான ரூ.23 கோடியை பள்ளி நிர்வாகம் இதுவரை செலுத்தாமல் இருந்து வந்தது. இதேபோல் அரசு நிலத்தையும் அதிக அளவில் ஆக்கிரமிப்பு செய்தது வருவாய் துறை அதிகாரிகள் நேரில் சென்று நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

25 ஏக்கர் நிலம் சீல் வைப்பு: இதையடுத்து திருவள்ளூர் மாவட்ட வருவாய் துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க உத்தரவிட வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்த நீதிமன்றமும் ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க வேண்டும் என உத்தரவிட்டது. இதையடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி, திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி தாசில்தார் கோவிந்தராஜ் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் நசரத்பேட்டை போலீசார் தனியார் பள்ளி செயல்பட்டு வந்த இடத்துக்கு சென்றார்கள். அங்கு தனியார் பள்ளியின் ஒவ்வொரு அறையும் பூட்டி வைக்கப்பட்டிருந்த பூட்டுகளை உடைத்து அதில் இருக்கும் ஆவணங்களை எடுத்து வைத்து விட்டு வீடியோ பதிவு செய்து 'சீல்' வைத்தார்கள். மொத்த நிலத்தையும் அதிகாரிகள் சீல் வைத்தனர்.

500 கோடி மதிப்புள்ள நிலம்: மீட்கப்பட்ட 25 ஏக்கர் நிலத்தின் மதிப்பு ரூ.500 கோடி என வருவாய் துறை அதிகாரிகள் கூறினார்கள். தற்போது மீட்கப்பட்டுள்ள இடத்தில் ஏற்கனவே பல்வேறு கட்டிடங்கள் இருக்கிறது. இந்த கட்டிங்கள் எதுவும் இப்போது இடிக்கப்படவில்லை.. இந்த கட்டிடங்கள் இடிக்கப்படுமா அல்லது கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு அரசு கல்லூரி அல்லது அரசு மருத்துவமனை அமைக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுபற்றி திருவள்ளூர் மாவட்ட அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+