பூந்தமல்லியில் ரூ.500 கோடி மதிப்புள்ள ஆக்கிரமிப்பு நிலம்.. பிரபல பள்ளியிடம் இருந்து அதிரடியாக மீட்பு
சென்னை: சென்னையை அடுத்த திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அருகே தனியார் இன்டர்நேஷனல் பள்ளி ஆக்கிரமிப்பு செய்திருந்த 25 ஏக்கர் நிலத்தை பூந்தமல்லி தாசில்தார் கோவிந்தராஜ் தலைமையில் வருவாய் துறை அதிகாரிகள் மீட்டனர். நசரத்பேட்டை போலீசாருடன் சென்று அதிரடியாக மீட்ட அதிகாரிகள், அந்த இடத்திற்கு நீதிமன்ற உத்தரவுப்படி சீல் வைத்தனர். மீட்கப்பட்ட நிலத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.500 கோடி என்று தெரிவித்தனர்.
சென்னை புறநகர் பகுதிகளில் நிலத்தின் மதிப்பு கடந்த 2011, 2012 வாக்கில் வெறும் 3 லட்சம் , 4 லட்சம் என்று இருந்த இடங்களில் எல்லாம் இன்று, 18 லட்சம் , 20 லட்சம் என்கிற அளவில் உயர்ந்துள்ளது. சென்னையில் ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் அசுர வளர்ச்சிக்கு பிறகு நிலத்தின் மதிப்பும் பல மடங்கு உயர்ந்துவிட்டது. இதனால் கடந்த 20 ஆண்டுகளில் நிலங்களை ஆக்கிரமிப்பதும் அதிகரித்தது. நீர் நிலைகள், நீர் வழிப்பாதைகள் என எல்லாவற்றையும் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி வளைத்து பட்டாவும் வாங்கினார்கள்.

அப்படி ஆக்கிரமித்த கட்டிடங்களால் தான், இன்றைக்கு சென்னை வெள்ளத்தில் மிதக்கிறது. இந்நிலையில் 2015 வெள்ளத்திற்கு பிறகு அரசு அதிரடியாக களம் இறங்கி, நீர்நிலை ஆக்கிரமிப்பு விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.. அதேபோல் அரசு நிலங்கள் எவை, எவை என்பதை தேடித்தேடி கண்டுபிடித்து அதிகாரிகள் மீட்டு வருகிறார்கள். அந்த வகையில் சென்னையை அடுத்த பூந்தமல்லி பகுதியில் 500 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை வருவாய் துறை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
குத்தகை நிலம்: பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கம் அருகே உள்ள கிராமம் பழஞ்சூர். இந்த பகுதியில் தனியார் இன்டர்நேஷனல் பள்ளி கொரோனாவிற்கு முன்பு வரை செயல்பட்டு வந்தது. பள்ளிக்கூடம் நடத்துவதற்காக 5 ஏக்கர் அரசு நிலத்தை அரசு குத்தகைக்கு எடுத்து இருந்தது. ஆனால் கொரோனா காலத்துக்கு பிறகு தனியார் செயல்படாமல் மூடப்பட்டது. இதனிடையே விதிமுறைகளை மீறி பள்ளி வளாகத்தை சுற்றியுள்ள சுமார் 20 ஏக்கர் நிலம் என மொத்தம் 25 ஏக்கர் நிலத்தை தனியார் பள்ளி ஆக்கிரமிப்பு செய்து செயல்பட்டு வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
பள்ளி நிர்வாகம் ஆக்கிரமிப்பு: இது ஒருபுறம் எனில், தனியார் இண்டர்நேஷனல் பள்ளி செயல்பட்டு வந்த நிலத்தின் குத்தகை காலம் 2013-ம் ஆண்டே முடிவடைந்த நிலையில், அரசுக்கு செலுத்த வேண்டிய குத்தகை பாக்கி தொகையான ரூ.23 கோடியை பள்ளி நிர்வாகம் இதுவரை செலுத்தாமல் இருந்து வந்தது. இதேபோல் அரசு நிலத்தையும் அதிக அளவில் ஆக்கிரமிப்பு செய்தது வருவாய் துறை அதிகாரிகள் நேரில் சென்று நடத்திய விசாரணையில் தெரியவந்தது.
25 ஏக்கர் நிலம் சீல் வைப்பு: இதையடுத்து திருவள்ளூர் மாவட்ட வருவாய் துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க உத்தரவிட வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்த நீதிமன்றமும் ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க வேண்டும் என உத்தரவிட்டது. இதையடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி, திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி தாசில்தார் கோவிந்தராஜ் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் நசரத்பேட்டை போலீசார் தனியார் பள்ளி செயல்பட்டு வந்த இடத்துக்கு சென்றார்கள். அங்கு தனியார் பள்ளியின் ஒவ்வொரு அறையும் பூட்டி வைக்கப்பட்டிருந்த பூட்டுகளை உடைத்து அதில் இருக்கும் ஆவணங்களை எடுத்து வைத்து விட்டு வீடியோ பதிவு செய்து 'சீல்' வைத்தார்கள். மொத்த நிலத்தையும் அதிகாரிகள் சீல் வைத்தனர்.
500 கோடி மதிப்புள்ள நிலம்: மீட்கப்பட்ட 25 ஏக்கர் நிலத்தின் மதிப்பு ரூ.500 கோடி என வருவாய் துறை அதிகாரிகள் கூறினார்கள். தற்போது மீட்கப்பட்டுள்ள இடத்தில் ஏற்கனவே பல்வேறு கட்டிடங்கள் இருக்கிறது. இந்த கட்டிங்கள் எதுவும் இப்போது இடிக்கப்படவில்லை.. இந்த கட்டிடங்கள் இடிக்கப்படுமா அல்லது கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு அரசு கல்லூரி அல்லது அரசு மருத்துவமனை அமைக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுபற்றி திருவள்ளூர் மாவட்ட அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
-
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் டிரான்ஸ்பரான சந்தீப் ராய் ரத்தோர் டிஜிபியானது எப்படி? இரவில் நடந்தது என்ன? -
சென்னைவாசிகளுக்கு மிக பெரிய நிம்மதி.. சீரானது புறநகர் ரயில் சேவை.. வழக்கமான அட்டவணையில் இயக்கம்! -
சென்னையின் மெகா மேக் ஓவர்.. நகரின் மையத்தில்.. வரப்போகும் 3 மேஜர் திட்டங்கள்.. இன்ஜினியரிங் அதிசயம்! -
கடும் கோபத்தில் மோடி.. சென்னை ரோடுஷோ - பிரசாரமே வேண்டாம்.. பாஜக தலைகளை பந்தாட தயாராகும் மேலிடம் -
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
அதிகாலையில் ஷாக்! தாறுமாறாக உயர்ந்த விமான கட்டணம்! சென்னை-தூத்துக்குடிக்கு டிக்கெட் ரேட்டை பாருங்க -
“தேவையில்லாம பேசின.. அவ்ளோதான்”.. விஜய்யை விமர்சித்த இளைஞரை விரட்டிச் சென்று மிரட்டிய ரசிகை! -
சென்னை Red zone.. நாளை சென்னைக்கு வரும் பிரதமர் மோடி.. டிரோன்களுக்கு தடை.. கடும் பாதுகாப்பு! -
LPG கேஸ் சிலிண்டர் பதுக்கினால் குண்டர் சட்டம் பாயும் - தமிழ்நாடு அரசு அதிரடி எச்சரிக்கை! -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை!












Click it and Unblock the Notifications