மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் இட ஒதுக்கீடு கட்டாயம்! சாதகம், பாதகம் என்ன? கல்வியாளர் சொல்வது இதுதான்!
சென்னை: மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின் போது இட ஒதுக்கீட்டை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த இட ஒதுக்கீட்டின் சாதகம் பாதகம் பற்றியும் இதன் தேவை அவசியம் தானா என்பது குறித்தும் கல்வியாளர் நெடுஞ்செழியன் ஒன் இந்தியா தமிழிடம் சில கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்.
அதன் விவரம் வருமாறு;

இட ஒதுக்கீடு
''மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டும் என்ற பள்ளிக்கல்வித்துறையின் உத்தரவு, மாநில பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு மட்டுமே பொருந்தும். இது சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு எந்த விதத்திலும் பொருந்தாது. என்னைக் கேட்டால் இந்த இட ஒதுக்கீடு முறையே தேவையற்ற ஒன்று. அனைவருக்கும் கல்வி என்பது தான் அரசின் கொள்கையாக இருக்க வேண்டுமே தவிர இப்படி இட ஒதுக்கீடின் அடிப்படையில் மாணவர்களை பிரிக்கக் கூடாது.''

உதாரணம்
''இப்ப உங்களுக்கு ஒரு உதாரணத்தை சொல்கிறேன், சென்னை போன்ற பெருநகரங்களில் பழங்குடியின மாணவர்கள் இருப்பது அபூர்வமானது. அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 1% இட ஒதுக்கீட்டில் மற்ற சமுதாயத்தை சேர்ந்த மாணவர்களை அட்மிஷன் போடக்கூடாது என்றால் அந்த இடம் காலியாக தான் இருக்கும். இன்னும் உங்களுக்கு விளக்கமாக சொல்ல வேண்டும் என்றால், ஒரு இடத்தில் ஒரு குறிப்பிட்ட கம்யூனிட்டியை சேர்ந்தவர்கள் அதிகம் இருப்பார்கள். இன்னொரு இடத்தில் அந்த கம்யூனிட்டியை சேர்ந்தவர்களுக்கு பிரதிநிதித்துவமே இருக்காது.''

சீட் வேஸ்ட்
''மயிலாபூர், திருவல்லிக்கேணி போன்ற இடங்களில் ஃபார்வார்டு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் அதிகம் இருக்கிறார்கள். ஆனால் அந்த இடத்தில் கொண்டு போய் பழங்குகுடியினர் உள்ளிட்ட இதர சமுதாயத்திற்கு இட ஒதுக்கீடு வழங்கினால் சீட் வேஸ்டாக போகும் நிலை தான் வரும். இட ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர்களை இப்படி பிரிக்கக் கூடாது என்பதே எனது நிலைப்பாடு. தரமான பள்ளிகளை தமிழகத்தில் இன்னும் அதிகரிக்க வேண்டும்.''

கல்வியாளர் நெடுஞ்செழியன்
''இதன் மூலம் மட்டுமே அனைவருக்கும் கல்வி என்பது சாத்தியமாகும்'' என கல்வியாளர் நெடுஞ்செழியன் தெரிவித்துள்ளார். இதனிடையே பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்துள்ள உத்தரவில், மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர் சேர்க்கையில், பொதுப்பிரிவுக்கு 31%, எஸ்.டி.பிரிவுக்கு 1%, எஸ்.சி.பிரிவுக்கு 18%, எம்.பி.சி. பிரிவுக்கு 20%, பி.சி. பிரிவுக்கு 26.5%, பி.சி.எம்.க்கு 3.5%, இட ஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டும் என கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications