கயிறு கட்டக்கூடாது.. கம்மல்,காப்புக்கு தடை.. பிறந்தநாள் அன்றும் சீருடை- மாணவர்களுக்கு அதிரடி உத்தரவு
சென்னை : பள்ளி மாணவர்கள் கைகளில் கயிறு கட்டக்கூடாது என சமூக பாதுகாப்புத்துறை அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், பிறந்தநாள் அன்றும் பள்ளி மாணவர்கள் சீருடை அணிந்துதான் பள்ளிக்கு வரவேண்டும் என்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் காப்பு போன்ற அணிகலன்களை அணியவும், கம்மல், செயின் போன்றற்றை அணிந்து பள்ளிக்கு வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளில் பிரிவினை
தமிழ்நாட்டில் அனைத்து தரப்பினரும் கல்வி கற்று முன்னேறும் வகையில் அரசு பல்வேறு நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வரும் நிலையில் பள்ளி மாணவர்கள் சாதி ரீதியான மோதல்களில் ஈடுபடுவது தொடர்கதையாகி வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் மாணவர்களிடையே சாதிய, வகுப்பு ரீதியான பிரிவினை அதிகரித்து வருவது அதிர்ச்சியளிக்கக் கூடியதாக உள்ளது.

உயிர் பலி வரை
சமீபமாக இந்தப் பிரச்சனை உயிர்பலி வரை செல்வது அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. கடந்த மே மாதம், நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த மாணவர் ஒருவருக்கும், சக மாணவருக்கும் இடையே கையில் கயிறு கட்டுவது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டதில், அது பெரிதாகி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழக்கும் நிலைக்குச் சென்றது. இதையடுத்து, பள்ளிகளில் சாதி அடையாளங்களை வெளிப்படுத்தும் வண்ணக் கயிறுகளை மாணவர்கள் அணியக்கூடாது என்று தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர்கள் சுற்றறிக்கை அனுப்பினர்.

கயிறு கட்டக் கூடாது
இந்நிலையில், பள்ளி மாணவர்களின் நலன் கருதி, சாதியை வெளிப்படுத்தும் கயிறு அணிவதை தடுக்கும் நோக்கில் பள்ளி மாணவர்கள் இனி கைகளில் கயிறு கட்டக்கூடாது என்று சமூக பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது. சமூக பாதுகாப்புத்துறை மூலமாக வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருக்கிறது. இதேபோல, வேறு சில மாவட்டங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுற்றறிக்கை
பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள அந்தச் சுற்றறிக்கையில், பள்ளிகளில் மாணவர்கள் கயிறு கட்டக் கூடாது, கம்மல், செயின், காப்பு போன்றவற்றை அணிந்து வரக் கூடாது, எண்ணெய் தேய்த்து தலை சீவியிருக்க வேண்டும், உடம்பில் டாட்டூ குத்தக்கூடாது, காலணி அணிந்து வரவேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

வண்ண உடை அணியக் கூடாது
மேலும், பிறந்த நாளாக இருந்தாலும் சீருடையில்தான் பள்ளிக்கு வர வேண்டும், புதிய வண்ண உடைகளை அணிந்து பள்ளிக்கு வரக்கூடாது என்றும் கட்டுப்பாடுகளை மாணவர்களுக்கு விதித்து சமூக பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
3 தொகுதிகள்.. அதிமுக கூட்டணியில் இணையும் தவாக? வேல்முருகனுக்கு எடப்பாடி பழனிசாமி கொடுத்த ஆபர்!












Click it and Unblock the Notifications