முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு பறந்த புகார்.. தமிழில் வரும் காஷ்மீர் பைல்ஸ் - தடைகோரும் எஸ்.டி.பி.ஐ
சென்னை: ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ள காஷ்மீர் பைல்ஸ் படத்தின் தமிழ் பதிப்பிற்கு தடை விதித்து தமிழ்நாட்டின் மத நல்லிணக்கத்தை காப்பாற்ற வேண்டும் என முதலமைச்சர் தனிப்பிரிவு மற்றும் ஜீ 5 நிறுவனத்திடம் எஸ்.டி.பி.ஐ. கட்சி மனு அளித்துள்ளது.
இயக்குநர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி இயக்கிய தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் மார்ச் மாதம் நாடு முழுவதும் வெளியானது.
விவேக் அக்னிஹோத்ரியின் மனைவி பல்லவி ஜோஷி, முன்னணி நடிகர் அனுபவம் கேர் உள்ளிட்ட பலர் நடித்து இருக்கும் அந்த படம்தான் தேசிய அரசியலில் விவாதப் பொருளாக மாறியது.

பிரதமர் மோடியின் பாராட்டை பெற்ற படம்
80 களின் பிற்பகுதியில் ஏற்பட்ட ஜம்மு காஷ்மீர் வன்முறை சமயத்தில் அங்கிருந்து காஷ்மீர் பண்டிட்டுகள் வெளியேற்றப்பட்டதாக இந்த படத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த படத்தை அண்மையில் பார்த்த பிரதமர் நரேந்திர மோடி, இயக்குநர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரியையும் படக்குழுவையும் நேரில் அழைத்து பாராட்டினார்.

சலுகை கொடுத்த பாஜக மாநில அரசுகள்
இந்த படத்துக்கு பாஜக ஆளும் மாநிலங்களான உத்தரப்பிரதேசம், கோவா, திரிபுரா, மத்திய பிரதேசம், கர்நாடகா, அரியானா, குஜராத், உத்தராகண்டில் வரி விலக்கு அளிக்கப்பட்டன. மத்திய பிரதேசத்தில் இந்த படத்தை பார்க்க செல்லும் போலீசாருக்கு ஒருநாள் விடுப்பு அறிவிக்கப்பட்டது. அதே போல் மற்ற சில மாநிலங்களிலும் அரசு ஊழியர்களுக்கு தி காஷ்மீர் பைல்ஸ் படத்தை பார்ப்பதற்காக விடுப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

கடும் எதிர்ப்பு
இந்த படம் குறித்து கேரள மாநில காங்கிரஸ் வெளியிட்ட பதிவில், "காஷ்மீர் தாக்குதல்களின்போது பண்டிட்டுகளுக்கு பாதுகாப்பு அளிக்காமல் அப்போது ஆளுநராக இருந்த பாஜக - ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர் ஜக்மோகன் அவர்களை காஷ்மீரை விட்டு வெளியேற சொன்னார்." எனக் குற்றம்சாட்டியது. அதே போல் தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேலும் காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்துக்கு எதிராக கருத்து தெரிவித்தனர். தமிழ்நாட்டின் முற்போக்கு அமைப்புகள் இதற்கு எதிராக தங்கள் கண்டனங்களை பதிவிட்டு வந்தனர்.

தமிழாக்கம்
இந்த நிலையில் இப்படம் வரும் ZEE5 ஓ.டி.டி. தளத்தில் இன்று இரவு வெளியாகும் என படக்குழு அறிவித்து இருக்கிறது. இதனிடையே இனவெறியை தூண்டும் 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படத்தின் தமிழாக்கத்தை தடை செய்ய வேண்டும் என முதலமைச்சர் தனிப்பிரிவில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயலாளர் டி.ரத்தினம் சார்பாக புகார் மனு அளித்துள்ளார்.

ஜீ 5 ஓடிடிக்கும் கடிதம்
"இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறியூட்டுதலை நோக்கமாகக் கொண்ட புனைவுகளின் அடிப்படையிலான 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படத்தை ZEE5 ஓ.டி.டி. தளம் வழியாக ஒளிபரப்பி, தமிழகத்தின் நல்லிணக்கத்தை சீர்குலைக்க ZEE5 நிறுவனம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது." என்பதை வலியுறுத்தி, ஜீ என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரிக்கும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயலாளர் டி.ரத்தினம் கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.
-
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications