சென்னையில் 21% பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது: அமைச்சர் எஸ்.பி. வேலுமணி
சென்னை: சென்னை மாநகராட்சியில் 21% பேருக்கு கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்து இருப்பது Sero Surveyயில் தெரிய வந்துள்ளது என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா வைரஸ் தொற்றுத் தடுப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நேற்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசுகையில், ''கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சியில் அக்டோபர் 11ஆம் தேதி வரை 58,493 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் சுமார் 30 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர்.
மேலும், மாலை 3 முதல் 5 மணி வரைக்கும், 6 முதல் 8 மணி வரைக்கும் மண்டலத்திற்கு 2 மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன. இதன்படி சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் தினமும் 30 மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன.

மேலும், சென்னை மாநகராட்சியில் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி கண்டறிய Sero Survey நடத்தப்பட்டது. 12,460 ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. இதில் 5ல் ஒரு பங்கு, அதாவது 21% பேருக்கு கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்து இருப்பது தெரிய வந்துள்ளது.
சென்னையில் மட்டும் மார்ச் 17 முதல் தற்போது வரை 1,82,014 பேர் பாதிக்கப்பட்டு, 1, 64,848 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 13, 751 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். அக்டோபர் 11ஆம் தேதி வரை 15,74,334 ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன'' என்றார்.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications