ஸ்வாஹா! வங்கி வாராக் கடன்! கடைத் தேங்காய்கள் கார்ப்பரேட் பிள்ளையார்களுக்கு! சு.வெங்கடேசன் ஆவேசம்..!
சென்னை : ஸ்டேட் வங்கியில் 8ஆண்டுகளில் 1.45 லட்சம் கோடி வராக்கடன் இருக்கும் நிலையில், வசூல் ஆனது 19000 கோடி மட்டுமே எனவும், கல்விக் கடன், குறு நிதி கடன்களை வசூலிக்க கழுத்தில் துண்டைப் போடுவார்கள்... கனவான்கள் எனில் கழுத்துக்கு மேல் காண்பிக்க மாட்டார்கள் என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
நாடாளுமன்ற மக்களவையில் மத்திய நிதித்துறை இணையமைச்சர் பகவத் காரத் நேற்று வங்கி வாராக் கடன்கள் குறித்து பேசிய போது," நாட்டின் பொருளாதார சூழல், துறை சார்ந்த பிரச்னைகள், சர்வதேச வர்த்தக இடர்ப்பாடுகள் உட்பட பல்வேறு காரணங்களால் வங்கிகளின் வாராக் கடன் அதிகரிக்கிறது என்றார்.

மேலும், இந்த வாராக் கடனை குறைக்க, மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் அவ்வப்போது பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன எனவும், இதன் வாயிலாக, கடந்த எட்டு ஆண்டுகளில் வங்கிகள், 8.60 லட்சம் கோடி ரூபாய் வாராக் கடனை வசூலித்துள்ளன என்றார்.
இந்நிலையில் ஸ்டேட் வங்கியில் 8ஆண்டுகளில் 1.45 லட்சம் கோடி வராக்கடன் இருக்கும் நிலையில், வசூல் ஆனது 19000 கோடி மட்டுமே என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக தந்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,"ஸ்டேட் வங்கியில் 8ஆண்டுகளில் 1.45 லட்சம் கோடி வராக்கடன். வசூல் ஆனது 19000 கோடி. மீதம் ஸ்வாஹா... கட்டத்தவறியவர்களின் பெயர்கள் ரகசியமாம். கல்விக் கடன், குறு நிதி கடன்களை வசூலிக்க கழுத்தில் துண்டைப் போடுவார்கள்...
கனவான்கள் எனில் கழுத்துக்கு மேல் காண்பிக்க மாட்டார்கள்...இப்படியாக மக்கள் சேமிப்புகள் சூறை. கடைத் தேங்காய்கள் கார்ப்பரேட் பிள்ளையார்களுக்கு" என பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications